செவ்வாய், 19 நவம்பர், 2019

An appeal to Sage Agastya Devotees



Dear Ardent devotees of Sage agastya,

Blessings to Everyone !!!

A long long years ago,An ancient temple was identified in a village called Ramanathanpuram, Pakkam near to Thiruninravur. The temple was surrounded by trees & It was severely affected by natural calamities. Due to this Village people's are afraid to approach the place. By god grace,Now the place was cleaned up and Construction also started with the estimation of 35 Lakhs In Indian rupees.
With the cost of 7Lakhs,Sanctum and Artha Manadaphas had constructed. To complete Ambal Sannidhi, Mani mandapha and other construction works are still pending.

As per Sri Gnana Skandar Jeeva Naadi reading,

"This temple was  worshiped by siddhas during ancient days  and nowadays also siddhas are still worshiping. This is temple having relationship with Eighteen siddhas. From this temple, Sage agastya had a wedding scene of Lord siva and Parvathy. This is temple had relationship with Cholza king. This temple is keeping enormous and holy spiritual power. This temple having powers of  Maragathambaigai and It is still emitting the Green Rays.

History of the temple is already existing in a palm leaf  and the palm leaf is currently present in where Cholza's are resided during ancient days. During the right time, The Palm leaf will appear automatically  and It will reveal the history of this temple. Whoever participating in the temple construction work will get blessings of Lord Nantheswarer.

During the time of Kalsabisegam, Lord Siva will appear with Ambigai along with Rishis, Nine crore  siddhas, Sage agasthiya with Lobamuthra devi.

If the participant in normal life, he will get better life and his wishes will get fulfill and If the participant in spiritual life ,He will attain the feet of lord Siva directly.Boga Maharishi, Pathanjali and Viyakrabathar also having relationship with this temple.This is temple having relationship with Thillai and Thiruppatur"



You can also participate by donating your value time, Guidance, Guidelines,offering Temple construction materials  and Money.

 We request you to take this opportunity and Forward your donations to below mentioned Account

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH

For verification and to participate in the activities, Always you can reach us on below mentioned number.
CELL : 9789053053

Yours Truly,
D.Kajendran
Sri Agastheeswarer arrakattalai samuga seva

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில்,மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவில் . திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில் ,ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்க கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய  விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.தற்போது திருப்பணி நிதி பற்றாக்குறை காரணமாக கேள்வி குறியாகி உள்ளது .

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம்.பதினென் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும்.அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம் .பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம்.சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப் பட்ட திருத்தலம் .உன்னத சக்திகள் நிரம்பப் பெற்ற  தலம்.பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும் ,அது தக்க காலத்தில் வெளிப்படும்.இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும்.குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன் ,ஆடலரசன்,ரிஷிகள்,நவகோடி சித்தர்கள்,லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும்  லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மிகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும்.போகர்,பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில்.தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவநாடியில் முருகப் பெருமானும் அகத்தியர் ஜீவநாடியில் அகத்திய பெருமானும் தெரிவித்துள்ளார்.

திருப்பணிக்காக இருகரம் ஏந்தி உங்கள் முன்பு நிற்கின்றோம் .கயிலைமலையான் திருவருளால் கற்கோவில் எழும்பட்டும்



திருப்பணியில் கலந்துக்கொள்ள தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்
திரு.D.கஜேந்திரன்
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீ்ழ்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
CELL : 9789053053

நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள் 

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH






ஆலய புகைப்படங்கள்.தங்கள் கவனத்திற்கு.


வியாழன், 14 நவம்பர், 2019

ஆடுதுறை ஸ்ரீ அகத்தியர் மற்றும் 18 சித்தர்கள் கோவில் திருப்பணிக்கு உதவி தேவை



பக்த கோடிகளுக்கு வணக்கம்,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலய சன்னதிக்கு கீழ்புறம், ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகள் மேல் நிலைப்பள்ளிக்கு அருகில் பல ஆண்டு காலம் வசித்து வரும் ஆடுதுறை சித்த வைத்திய நிபுணர் தவத்திரு. R. M. பத்மாவதி அம்மாள் அவர்களின் பெரு முயற்சியால் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கோயில் கடந்த 2014 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி, பணிகள் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்கள் உதவியோடு பணிகள் நடைபெற்று வருகிறது. சித்தர்களின் உத்தரவுபடி விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே இதை காணும் தர்ம சீலர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள், பக்த கோடிகள் தங்களால் இயன்ற உதவியை தொகையாகவோ, சிமென்ட், ஜல்லி, செங்கல், கம்பி, பெயின்ட் மற்றும் கும்பாபிஷேக சாமான்கள் போன்றவற்றை கொடுத்து எல்லாம் வல்ல ஸ்ரீ அகத்தியர் மற்றும் 18 சித்தர்கள் மற்றும் ஸ்ரீ சந்தோஷி மாதா மற்றும் அருள்மிகு தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத ஸ்வாமி அவர்களின் அருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:

R. M. பத்மாவதி அம்மாள்,
அகத்தியர் சித்த வைத்திய சாலை,
19/3, சிவன் சன்னதி தெரு,
ஆடுதுறை- 612 101. தஞ்சை மாவட்டம்.
செல் : 9940750047,

என்றும் இறை பணியில்,

வெங்கட் ராமன்.R - 9597038541
ஜெய் குமார் - 9488380499

வங்கி கணக்கு விவரங்கள்:

Name:R.M.PADMAVATHI
Bank:கனரா வங்கி
Ac.No. 1202101030710
IFSC CODE: CNRB0001002
MICR CODE : 612015004




 கோவில் திருப்பணி நடைப் பெற்றுவரும் புகைப்படங்கள் அடியார்களின் பார்வைக்காக 


ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

அகத்திய மாமுனிவரின் 108 போற்றிகள்


ஓம் சத்குருவே போற்றி
ஓம் குறுமுனியே போற்றி
ஓம் அகத்தீசா போற்றி
ஓம் ஒளிரூபமே போற்றி
ஓம் விபூதி பிரியரே போற்றி
ஓம் பொதிகை வேந்தே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் அருள் செய்பவரே போற்றி
ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி
ஓம் தீபச்சுடரே போற்றி
ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ
ஓம் குறுவடி மகனே போற்றி
ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி
ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி
ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி
ஓம் செந்தமிழ் முனியே போற்றி
ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி
ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி
ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி
ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி
ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி
ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
ஓம் ஞான ரூபமே போற்றி
ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி
ஓம் சருவாந்தர் யாமியே போற்றி
ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி
ஓம் தத்துவமானவரே போற்றி
ஓம் குற்றாலத்து பெருமகானே  போற்றி
ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி
ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி
ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி
ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி
ஓம் மாசற்ற மணியே போற்றி
ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் நறுமண விரும்பியே போற்றி
ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி
ஓம் இனிமையுடையோய் போற்றி
ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி
ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி
ஓம் தருமத்தின்  வடிவே போற்றி
ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி
ஓம் கும்ப வடிவானவனே போற்றி
ஓம் நீதி வழங்குபவனே போற்றி
ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி
ஓம் புகழுருவே போற்றி
ஓம் புலமைக்கு வித்தே போற்றி
ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி
ஓம் கரை கண்டோரே போற்றி
ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி
ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி
ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி
ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி
ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி
ஓம நீதி வழி நிற்போரே போற்றி
ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி
ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி
ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி
ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி
ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி
ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி
ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி
ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி
ஓம் புத்துணர்வு அளிக்கும் சொல்லே போற்றி
ஓம் காளியுமை ஆசி பெற்றோய் போற்றி
ஓம் தந்தையும் தாயுமானோய் போற்றி
ஓம் ஆதி ரூபமே ஆனாய் போற்றி
ஓம் எளியோருக்கும் எளியோரே போற்றி
ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி
ஓம் வல்லமை படைத்தவரே போற்றி
ஓம் பாண்டி நாட்டில் தமிழ் வளர்த்தோய் போற்றி
ஓம் சோதிட ஆசனாகியோய் போற்றி
ஓம் சச்சிதானந்தம் அருள்வாய் போற்றி
ஓம் நெஞ்சில் நீக்கமற நிறைந்தோய் போற்றி
ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி
ஓம் வித்தையின் கடலே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் நற்சுகம் தருவோய் போற்றி
ஓம் சிற்சபை கண்டோய் போற்றி
ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி
ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி
ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி
ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி
ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி
ஓம் மருத்துவ மாமணியே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி
ஓம் பரிவு காட்டுபவரே போற்றி
ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி
ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி
ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி
ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி
ஓம் மகிமையை அருள்வோய் போற்றி
ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி
ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி
ஒம் எல்லையில்லா கருணையே போற்றி
ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி
ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி
ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி
ஓம் அல்லல் அறுப்போய் போற்றி
ஓம் அருட்பெருந்தீயே போற்றி
ஓம் அமுதே ஆனாய் போற்றி
ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி
ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி
ஓம் நித்யமடைந்தாய் போற்றி

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பாவம் ஓரளவு குறைந்திருக்கிறது என்பதை மனிதர்கள் எப்படி அறிந்து கொள்வது குறித்து அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும்கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக்கொண்டேதான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கிறது, மிக, மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். ‘ நான் யார் ? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன் ? என் வலிமை என்ன ? என்னுடைய செல்வம் என்ன ? என் பதவி என்ன ?  என் செல்வாக்கு என்ன ? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான் ? ‘ என்பது போன்ற எண்ணங்களெல்லாம் மெல்ல, மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும், கூடுமானவரை தனிமையை விரும்பும். ‘ புரிதல் இல்லாத மனிதர்கள் எது வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்துகொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வோம் ‘ என்ற ரீதியில்தான் மனித மனம் இருக்கும். இவன் நண்பன், இவன் எதிரி என்கிற நிலையெல்லாம் கடந்துபோகுமப்பா. எனவே பாவங்கள் குறைய, குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

பற்றும், ஆசையும், அகங்காரமும் இருக்கும்வரையில் மனிதனுக்கு எத்தனைதான் இறைவன் கொடுத்தாலும் அதனை நுகருகின்ற தன்மையில்லாமல் போய்விடும். எதை எண்ணியாவது ஒரு மனிதன் கவலைப்படுகிறான். ‘ ஏன் கவலைப்படுகிறாய் ? ‘ என்று கேட்டால் ‘ இதைப்போல் நான் எண்ணுகிறேன். ஆனால் இதைப்போல் நடக்கிறது. பின்னர் எவ்வாறு கவலைப்படாமல் இருப்பது ? ‘ என்று கேட்கிறான். ‘ சரி, கவலைப்படுவதால் உன் பிரச்சினை தீரப்போகிறதா ? ‘ என்று கேட்டால் எந்த மனிதனிடமும் பதில் இல்லை. ஒன்று, முழுமையாக தன் அறிவை பயன்படுத்தி தனக்கு வந்துள்ள துன்பத்தை விலக்கிவிட அவன் முயற்சி செய்யவேண்டும் அல்லது இறைவழியில் வருகின்ற மனிதனாக இருந்தால் ‘ எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார். என் கடமையை அன்றாடம் நேர்மையாக செய்வேன். பிறர் குறித்து எனக்குக் கவலையில்லை ‘ என்ற ரீதியில் ஒரு மனிதன் வாழ்ந்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் ஒரு மனிதன் சிந்தனையால் தன்னை சித்ரவதை செய்துகொள்வது என்பது ஒருவகையான தண்டனைதான் என்றாலும்கூட இதனை தெளிந்த அறிவுகொண்டு நீக்கிவிடவேண்டும். இவ்வாறு அறிவு பூர்வமான வாதங்களால் ஒரு மனிதனுக்கு எதனையும் புரிய வைக்க இயலாது என்றுதான் கால, காலமாக பக்தி மார்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரவிலே உறங்குவதற்கு முன்னால் மிதமான உணவு உண்ட பிறகு சிறிது நடை பயிற்சியையும் செய்த பிறகு இறைவனின் திருநாமத்தை, யாருக்கு எந்த நாமம் பிடிக்கிறதோ அதனை முடிந்தவரை உருவேற்றிவிட்டு பிறகு அமைதியான மனதோடு ஒருவன் உறங்க செல்வது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

இறைவனின் அருளைக்கொண்டு இத்தருணம் இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமான சிந்தனைகளும், எண்ணங்களும் மீண்டும், மீண்டும் இறைவன் அருளாலே மாந்தர்கள் மனதிலே பதிந்து, விதி எவ்வாறு இருந்தாலும்  தொடர்ந்து இறை வழியில் வர இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு




அகத்திய அடியார்களுக்கு வணக்கம்,

அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில் உரைத்தது

"ஆவணி மாதம் சூர்யன் ஆட்சி இதனுடன் நெருப்பு கிரகமான செவ்வாய் கூடின 10.8.2019 அன்று முதல் காடுகள் நில தலைவனாகிய மால் மாயோன் நிலத்தில் (காடுகளில்) நெருப்பு  குற்றம் ,மலை சரிவு கடுமையான பாதிப்புகள் உண்டாக ஏதுவாக வரும் ஓர் திங்கள் இது தொடர அபயம் தரும் மாயோன் திருமாலை போற்றி துதி செய்து கார்மேகனிடம் வேண்டுதல் வையுங்கள்.

ஆவணி திருவோணம் (11.09.2019) மிகவும் நல்ல தருணம். நிலம், நீர் ,நெருப்பு இதிலிருந்து உயிர்களை பயிர்களை தருக்களை காக்க ஏக மனதாக திருமாலை போற்றி சங்கல்பம் செய்து காப்பவன் அருளால் நலம் அடையுங்கள்."

ஆகவே அன்பர்களே இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு செய்து இயற்கையை காக்க சங்கல்பம் வைக்க வேண்டுகிறோம்.மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆவணி திருவோணம் (11.09.2019) அன்றாவது பெருமாள் வழிபாடு செய்ய வேண்டுகிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா  தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக!!!

வெள்ளி, 11 ஜனவரி, 2019

நல்லெண்ணெய்யின் குண நலன் பற்றிய அகத்தியர் குணவாகடம் நூல் குறிப்பு



புத்திநயனக்குளிர்ச்சி பூரிப்பு மேய்ப்புளகஞ்
சத்துவங் கந்தி தனியிளமை - மெத்தவுண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய்போ மெண்ணெய்யாற் போற்று"
-அகத்தியர் குணவாகடம்

எள் எண்ணையை இரண்டு அல்லது நாலு உச்சிக்கரண்டியளவு ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டு வர, இது புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உடல்வன்மை ஆகியவைற்றைத் தருவதோடு கண்ணோய், காதுநோய், தலைக்கொதிப்பு, சொறிசிரங்கு, புண் முதலியவைகளையும் போக்கும், இருமலை தணிக்கும், மனமகிழ்ச்சியைத் தரும்.