புத்திநயனக்குளிர்ச்சி பூரிப்பு மேய்ப்புளகஞ்
சத்துவங் கந்தி தனியிளமை - மெத்தவுண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய்போ மெண்ணெய்யாற் போற்று"
-அகத்தியர் குணவாகடம்
எள் எண்ணையை இரண்டு அல்லது நாலு உச்சிக்கரண்டியளவு ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டு வர, இது புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உடல்வன்மை ஆகியவைற்றைத் தருவதோடு கண்ணோய், காதுநோய், தலைக்கொதிப்பு, சொறிசிரங்கு, புண் முதலியவைகளையும் போக்கும், இருமலை தணிக்கும், மனமகிழ்ச்சியைத் தரும்.

Nice, Ayya!
பதிலளிநீக்கு