ஞாயிறு, 17 நவம்பர், 2019

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில்,மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவில் . திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில் ,ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்க கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய  விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.தற்போது திருப்பணி நிதி பற்றாக்குறை காரணமாக கேள்வி குறியாகி உள்ளது .

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம்.பதினென் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும்.அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம் .பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம்.சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப் பட்ட திருத்தலம் .உன்னத சக்திகள் நிரம்பப் பெற்ற  தலம்.பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும் ,அது தக்க காலத்தில் வெளிப்படும்.இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும்.குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன் ,ஆடலரசன்,ரிஷிகள்,நவகோடி சித்தர்கள்,லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும்  லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மிகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும்.போகர்,பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில்.தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவநாடியில் முருகப் பெருமானும் அகத்தியர் ஜீவநாடியில் அகத்திய பெருமானும் தெரிவித்துள்ளார்.

திருப்பணிக்காக இருகரம் ஏந்தி உங்கள் முன்பு நிற்கின்றோம் .கயிலைமலையான் திருவருளால் கற்கோவில் எழும்பட்டும்



திருப்பணியில் கலந்துக்கொள்ள தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்
திரு.D.கஜேந்திரன்
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீ்ழ்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
CELL : 9789053053

நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள் 

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH






ஆலய புகைப்படங்கள்.தங்கள் கவனத்திற்கு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக