வெள்ளி, 3 ஜூலை, 2020

தொற்று நோயிலிருந்து விடுபட குருமார்களை பணிந்து போற்றுவோம்




புண்ணிய பூமியான இந்த பாரத தேசமும்,ஆன்மீக பூமியான இந்த தமிழகமும் தொற்று நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது.எந்த மருத்துவமும் கை கொடுக்கவில்லை மற்றும் மக்களும் கலியின் பிடிக்கு ஆட்பட்டு இறை நினைப்பை விடுத்து உலகமே துன்பத்தில் ஆழ்ந்து அடைபட்டு கிடக்கிறது.

பல சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் தோன்றிய இந்த புண்ணிய பூமிக்கு ஏன் இந்த இழிநிலை?.

அவர்களை நாம் மறந்ததுதான்.

கருவூரார் சித்தர் தன் வாதகாவியம் பாடல் 147ல் சொல்கிறார்...

கலியன் வந்தானென்று ககன ரிஷிகளும்
கலியனைக் கண்ணிலும் காணாதிருக்க
கலியனை விட்டு கயிலைக்கு சென்றே
கலியுக மட்டுங் கடுந்தூக்கங்கொண்டார்

என சொல்கிறார்..அதாவது இப்போது இருக்கும் கலியுகத்தை கன்ணிலும் பார்க்க கூடாது என்றும் வாழப்பிடிக்காமலும் கயிலை மலையில் யோக நிஷ்டைக்கு சென்று விட்டார்களாம்..அவ்வளவு அராஜகங்களும் கொடூரங்களும் தர்மத்துக்கு இடையூறுகளும் நடக்குமாம் இந்த கலியுகத்தில்.கலியுகத்தில்உண்மையானசித்தர்களும்,முனிவர்களும்,
சாமியார்களும் காண முடியது என்றும் அப்போதே சொல்லி இருக்கிறார்.        

ஆனால் உண்மையாக தன் குருமார்களிடம் பக்தி கொண்டோர் வேண்டினால் அவர்கள் தங்களின் தூக்கத்தை கலைத்து தம் சேய்களான நம்மை காப்பாற்ற மாட்டார்களா?

இந்த குரு பூர்ணிமா நிகழும் நன்னாளான 

04-07-2020  மதியம் 12:02ல் இருந்து நாளை காலை  05-07-2020 10:58 க்குள் 

அவர்களை வேண்டி துதிப்போமா?

நம்மை படைத்த தெய்வம் நம்மை காக்காதா?.ஏன் குருமார்களை வேண்ட வேண்டும் என்று கேட்கலாம்.

நீங்கள் குருவிடத்து வேண்டும் போது,உங்களின் வேண்டுதல் அவரின் பரம குருவிடம் செல்லும்.பின் பரமகுருவின் வேண்டுதல் பராபர குருவின் குருவிற்க்கு செல்லும்.பராபர குருவின் வேண்டுதல் பராபரத்திடம்  செல்லும்.

நம்முடைய வேண்டுதலால் மட்டும் இந்த தொற்று நோயை ஒழிக்க இயலாது.நம்முடைய குருமார்களும்,அவர்தம் குருமார்களும் துணை நின்றால் மட்டுமே சாத்தியம்.

வேண்டுதல்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!      
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக !

அப்பனே!எங்கள் குருமார்களே,முனிவர் பெருமக்களே,ரிஷிமார்களே,முனிபுங்கவர்களே,சித்த புருஷர்களே மற்றும் ஆச்சாரிய பெருமக்களே இது காலும் தங்களை மறந்து நாங்கள் இறை நினைப்பு சற்றும் இன்றி கலியின் ஆட்டத்திற்கு உட்பட்டு கிடக்கின்றோம்.இறையும் குருவும் ஒன்றென உணர்ந்தோம்.ஆகையால் எங்களை எல்லோரும்  உங்கள் சேய்களாக ஏற்று

மானிட ரூபமுள்ள ருத்ர பசுபதியும்

சிவ தத்துவம்,ஆத்ம தத்துவம்,வித்யா தத்துவம் மற்றும் சர்வ தத்துவங்களுக்கு மத்தியில் பிந்துவில் மும் மூர்த்திக்களையும்,பஞ்ச பூதங்களை ஆசனமாக கொண்ட அன்னை லலிதாம்பிகையும்              
 
 
இந்த தொற்று நோயின் பிடியில் இருந்து அனைத்து உலக மக்களையும்  காப்பாற்றி உய்வித்து அருள தங்களின் பொற்கமல பாதார விந்தங்களை பணிகின்றோம்.

ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !      

ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !
         
ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !            

திங்கள், 27 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -3



தாயாயுமென்றந்தை  தானாயுநின்று நீ
தானாகவருள்  புரியவும்
தாபந்தமெல்லா மறிந்த நிஷ்டைச்
சகாவென்றவருள்  புரியவும்
நாயடியனுய்பும்  பொருட்டாகரட்சித்து
நாடோறுமருள்  புரியவும்
நச்சுநச்சென்றனைய ரற்றுறெ என்றனை   
நகைத்திடாதருள்  புரியவும்
தூயனேமாயனே  நேயனே தாயனே 
தொழும்புகொண்டருள் புரியவுந்
தோலாவழக்கனிவ னென்றுசொல்லாமெலென்
றுரையேயுனருள்  புரியவும்
வாய்மொழிமறக்கும்முன் றவராஜசிங்கமே     
வரவேண்டுமென்றனருகே
மாகுணங்குடிவாழு  மென்னகத்தீசனே

பொருள்:

எனக்கு தாயாகவும் ,தந்தையாகவும் நின்று தானாக அருள்  புரியவும்,புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தாங்கள் அறிந்த தியானத்தில் சங்கடம் இல்லாமல் வாசியே எனக்கு நண்பனாக  அருள்  புரியவும்,நாய்  போன்ற அடியேனையும் ஒரு  பொருட்டாக ஏற்று ரட்சித்து நாள்தோறும் அருள்  புரியவும்,நச்சு,நச்சு என்று புலம்புகின்ற என்னை பார்த்து சிரிக்காமல் அருள்  புரியவும் ,தூய்மை ஆனவரே,மாய தோற்றம் கொண்டவரே  ,அன்புள்ளம் கொண்டவரே ,தாய் போன்றவரே,உன் அடியார் கூட்டத்தில் என்னை ஆட்கொண்டு சேர்த்து அருள் புரியவும்,தீராத வழக்கு கொண்டவன் சொல்லி என்னை ஒதுக்காமல் என் துரையே அருள் புரியவும்,உண்மையான மொழியால் அடியேன் பாடியவை யாவும் மறக்கும் முன் தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -2



என் தலையிட்ட விதி என்னமோ என்னநான்
இடையாமல் அருள் புரியவும்
என் செய்தேன் என்றடிமை எண்ணாத எண்ணங்கள்
எண்ணாமல் அருள் புரியவும்
பந்தமதில் இட்ட மெழுகு என்னை நெஞ்சுருகிப்
பதைத்திடாது அருள் புரியவும்
பாவி ஆகாது என கருணை நயனம் கொண்டு
பார்த்து நல் அருள் புரியவும்
மந்திரம் கொண்டு மாங்காய் விழாது ஆதலான்
மனம் உவந்து அருள் புரியவும்
மாரியினும்  நின் கருணை மாறி அணுமாறாது
வருஷிக்க  அருள் புரியவும்
வந்து பணிவார்க்கு உதவு மெய் தவராஜ சிங்கமே
வரவேண்டும் எந்தன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மௌன தேசிக நாதனே

பொருள்

என் தலையில்  எழுதப் பட்ட  விதி என்னவாக இருந்தாலும் அடியேனுக்கு அருள் புரியவும், அடியேன்  என்ன செய்தேன் என்று எண்ணங்களால் எண்ணிப் பார்க்காது அருள் புரியவும், மெழுகு போன்ற பந்தத்தில் இடப் பட்ட என்னை மெழுகாகப்பட்டது நெருப்பால் உருகிப் போவது போல் பதைத்திடாது அருள் புரியவும்,என்னை பஞ்சமாபாதகம் செய்த பாவி என்று ஆகாது என ஒதுக்காமல் நின் கருணை பார்வை கொண்டு பார்த்து நல் அருள் புரியவும்,வெறும் மந்திரம் சொன்னால் மாங்காய் பால் என்ற அமிர்தம் சகஸ்ரஹாரத்தில் இருந்து சுரக்காது மற்றும் நின் கருணையால் அது கூடும் என்று சித்தாதி சித்தர்கள்,தேவர்கள்,ரிஷிகள் நினைப் பணிந்தனர், ஆதலால் மனம் உவந்து அருள் புரியவும்,மேகத்திலிருந்து பொழியும் நீரின் தன்மை அணு அளவு கூட எப்படி மாறதோ அது போல் அடியேனும் கருணை மழை  பொழிந்து  அருள் புரியவும் ,உன்னை வந்து பணிபவர்களுக்கு எல்லாம்  உதவுகின்ற சத்தியமாகிய,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

 


செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை


குருவருள் நிலை

தாய் அனைய இன்பம்தனைந் தந்து தந்துகை
தழுவி நின்று அருள் புரியவும்
தந்தை தாயும் தானே ஆகவும் இருந்து எனைத்
தற்காத்து உன் அருள் புரியவும்
சேய் என்று இரங்கி அனைகாலியின் கன்றுஎனச்
சீராட அருள் புரியவும்
செங்கீரை ஆடு சிறுமதலை போல் கொஞ்சிநான்
செல்வம் இட அருள் புரியவும்
பாயும் மடை கால் கண்டு கரைபுரள வரும் மதிப்
பால் கொடுத்து அருள் புரியவும்
பக்குவத்தோடு மவுனத் தொட்டிலுக்குள்
படுக்க வைத்து அருள் புரியவும் 
வாயுவை கட்டவும் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே

பொருள்:

ஒரு தாயாகப்பட்டவள் ஓர் குழந்தையை அணைத்தால் எவ்வளவு இன்பம் ஏற்படுமோ அதுபோல் எனக்கு கை தந்து அருள் புரியவும்,தந்தை மற்றும் தாயாகவும் இருந்து என்னை காப்பாற்றி  அருள் புரியவும்,ஒரு பசுவாகப்பட்டது எப்படி கன்றை  குழந்தையாக  கொள்வதுபோல் அடியேனை  ஏற்று சீராட்டி அருள் புரியவும்,செங்கீரை பருவமான ஐந்தாவது மாதத்தில் ஒரு குழந்தை தன் தலையை இங்குமங்கும் அசைத்தாடுவது போல செல்வத்தை கேட்போருக்கு இட அருள் புரியவும்,நீர்நிலை களில் மடையை திறந்தவுடன் நீராகப்பட்டது எப்படி கரைபுரண்டு ஓடுமோ அதுபோல் அடியேனுக்கு ஞானப் பால் கொடுத்து 
அருள் புரியவும்,பக்குவத்தோடு மவுனம் என்ற தொட்டிலுக்குள் அடியேனை படுக்கவைத்து அருள் புரியவும்,வாசியை நடுநாடியில் செலுத்த அருள் புரியவும் ,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


திங்கள், 20 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம்





குரு வணக்கம் 

குணங்குடியார் நற்குணங்குடி ஓங்கக் 
கொடு கொடு என்று அடிக்கடி குணங்குங்
குணங்குடியார் துர்க்குணங்குடி போகக்
குணமெலாம் திரண்டு அருள் பரப்பிப்
குணங்குடி ஏறிக்  குறைவற  நிறைந்து
குணக் கடலான மெய்ஞ்ஞானக்
குணங்குடி வாழும் என் அகத்தீசனாம் என்
குருபதம் சிரத்தின் மேல் கொள்வாம்

பொருள்:

என்னிடம் உள்ள நற்குணங்கள்  ஓங்கவும் ,தீயகுணங்கள் போகவும்,குணமெலாம் திரண்டு அருள் பரப்பி  குணங்குடியில் ஏறி என் குறைகள் எல்லாம் குறைவறச் செய்து குணக்கடலான என் குருநாதர் அகத்தீசர் குருபதத்தை சிரத்தின் மேல் கொள்வோம்.



வெள்ளி, 27 மார்ச், 2020

சித்தரடியார்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்





கோவில்கள் அனைத்தும் அடியார்கள் நுழைய வாய்ப்பில்லாத இந்த சூழ்நிலையில் , சித்தரடியார்கள் அவரவர் தத்தம் இல்லங்களில் இருந்து கொண்டே வெட்ட வெளியில் (வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ)  தீபம் ஏற்றி இப்போது உள்ள அசாதாரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று அவரவர் குருமார்களை துதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

வெட்ட வெளி தீபத்தின் மகத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் சித்தர் பெருமக்களே !!!
அதன் மகத்துவத்தை அவர்கள் அடியார்களான நாமும் உணர வேண்டி இது வெளிப்படுத்தப் படுகிறது.

சனி, 28 டிசம்பர், 2019

கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 8ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு


அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும். வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

  2020ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.

2020ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.


மிகவும் கடினமான  அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள்  அனுமதி இல்லை 

இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.






ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.  


கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு  



 கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 10 வரை நடை பெறும்.

  • அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 
  • புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது 
  • பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு  அனுமதி இல்லை 
  •  ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 50ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட   நபர்களுக்கு 70ரூபாய் கட்டணம்  (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட  நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். 
  • ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம். 
  • தனி நபர் என்றால் 1,100/- கட்டணம்
உதவிக்கு 0471-2360762 என்ற என்னை அழைக்கலாம்.

-நன்றி :கேரள வனத்துறை.