குரு வணக்கம்
கொடு கொடு என்று அடிக்கடி குணங்குங்
குணங்குடியார் துர்க்குணங்குடி போகக்
குணமெலாம் திரண்டு அருள் பரப்பிப்
குணங்குடி ஏறிக் குறைவற நிறைந்து
குணக் கடலான மெய்ஞ்ஞானக்
குணங்குடி வாழும் என் அகத்தீசனாம் என்
குருபதம் சிரத்தின் மேல் கொள்வாம்
பொருள்:
என்னிடம் உள்ள நற்குணங்கள் ஓங்கவும் ,தீயகுணங்கள் போகவும்,குணமெலாம் திரண்டு அருள் பரப்பி குணங்குடியில் ஏறி என் குறைகள் எல்லாம் குறைவறச் செய்து குணக்கடலான என் குருநாதர் அகத்தீசர் குருபதத்தை சிரத்தின் மேல் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக