வ்ருக்ஷங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு.வ்ருக்ஷங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள்.நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும்,பூஜிக்க வேண்டும் என்றில்லை.எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும்.ஏனென்றால்,மரங்கள் தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும்.அது மட்டுமல்லாது,மரங்கள் காதல் செய்கிறது.இதை மனிதர்கள் யாராவது நம்புவார்களா?
மரங்களை ஓரறிவு என்று கூறினாலும் கூட,தேவர்கள்,முனிவர்கள் தவம் செய்வதற்காக,மரங்களாக அவதாரம் எடுப்பார்கள்.மரத்தின் மீது “கூரானை”செலுத்துவது,மகா பாவம்.அது மட்டுமல்லாது,ஒரு மரமானது,எத்தனையோ உயிர்களுக்கு,நிழலை,காயை,கனியை,உறைவிடத்தைத் தருகிறது.பலவற்றை மரம் தருவதால்,அதற்கு “தரு”என்ற ஒரு பெயர் உண்டு.”கற்பக வ்ருக்ஷம்”என்று ஒவ்வொரு மரத்தையுமே கூறலாம்.அது மட்டுமல்லாது,ஒவ்வொரு மரமும்,மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது.அவை பாவம் செய்வது கிடையாது.எனவே,மரங்கள் அனைத்துமே போற்றப்பட வேண்டியவை என்பதால்தான்,வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.”ஸ்தல வ்ருக்ஷம்” என்று வைத்து,ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப்படுகிறது.அந்த வ்ருக்ஷம்,அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக