புதன், 15 ஆகஸ்ட், 2018

கோவில் சென்று வணங்கும் முறை பற்றி ஸ்ரீ அகத்தியர் அருளிய ஜீவ வாக்கு

முதலில் கோவில் கோபுரங்களை வணங்க வேண்டும் , கோவில் படிக்கட்டுகளில் பெரும்பாலும் முனிவர்கள் தவம் செய்து  கொண்டிருப்பார்கள் , அவர்களிடம் மானசிகமாக " நான் மனிதனாய் பிறந்து விட்டேன் , வேறு வழி இல்லாமல் உங்களை மிதித்து கொண்டு செல்கிறேன் , மன்னித்து ஆசி கூறுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும் ( வேறொரு வாக்கில் கோவில் படிக்கட்டுகளுக்கு பாலாபிஷேகமே செய்யலாம் தெரியுமா என்று உரைத்திருந்தார் ) . கோவில் புண்ணிய தீர்த்தங்கள் இருந்தால் அவற்றில் நீராடி , இயலவில்லை என்றல் அவற்றில் பாதம் நனைத்து அந்த தீர்த்தத்தை தெளித்துக்கொள்ளவேண்டும். கருவறை உள்ளே செல்லும் முன்னர் துவார பாலகர்களைவணங்கி விட்டு உள் செல்ல வேண்டும்.

நிறைய வாசனை மிக்க மலர்களை சாற்றி , அந்த ஆலயத்தில் உள்ள நம்பிக்கையின் படி நிறைய நெய் தீபங்கள் ஏற்றிட வேண்டும். ஆலய அர்ச்சகர் மற்றும் "மிக முக்கியமாக" கோவில் சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் இது போல் இன்னொரு முறை தர்மம் கிடைக்குமா என்று என்னும் அளவுக்கு நிறைய தர்மம் செய்து விட வேண்டும். பின்னர் ஆலய பிரகாரங்களை வலம் வந்து , கொடி மரத்தின் முன் சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பின்னர் தனிமையில் அமர்ந்து அமைதியாக த்யானம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன விஷயங்களில் மிக முக்கியம் செய்கின்ற பிரார்த்தனை ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக