வியாழன், 30 நவம்பர், 2017

திருவண்ணாமலை தீப மை மற்றும் திருவொற்றியூர் அபிஷேக எண்ணெய்



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் கோவில்கள், முருகரின் கோவில்களில் தீபம் ஏற்றுவது ஒரு திருவிழா போல நடக்கும். தீபம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, திருவண்ணாமலை. ஒரு கொண்டாட்டமே அங்கு நடக்கும். சித்தர்களும், முனிவர்களும் கூட வந்திருந்து இறை அருளை பெற்றுக் கொள்வர்.

திருவண்ணமலையில், மலை உச்சியில் ஏற்றப் படுகிற தீபக் கொப்பரையிலிருந்து  எடுக்கப் பட்ட "மையை" புனுகு, ஜவ்வாது சேர்த்து, அங்கே கோவிலில் உரையும் நடராஜார் பெருமானின் சிலைக்கு அணிவித்தப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்த மை, அதை அணிகிற பக்தனுக்கு கவசமாக நின்று காப்பாற்றுகிறது என்பது நிதர்சன உண்மை.



இதே போல், சென்னை திருஒற்றியூரில்,அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாக ராஜர் ஆலயத்தில் ஆதிபுரீஸ்வரர் (படம்பக்க நாதர் ) கோவிலில், அன்றைய தினம் புற்றை மூடி இருக்கும் கவசத்தை விலக்கிவிட்டு , பரணி நட்சத்திரத்தன்று, எண்ணை அபிஷேகம் செய்வார்கள் (03/12/2017). பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அபிஷேகத்துக்கு எண்ணை வாங்கிக் கொடுக்கலாம். புற்றுக்கு அபிஷேகம் செய்தபின், பிரசாதமாக தருவார்கள். அதை உடலில் அணிந்து கொள்ள, நல்ல பாதுகாப்பை, இறை அருளை பெற்றுத் தரும்!

சென்னையில் வசிப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக