இறைவனின் கருணையாலே இது குறித்து பலமுறை கூறியிருக்கிறோம். சுருக்கமாகக் கூறுகிறோமப்பா. ஏற்கனவே கேட்ட மனிதனிடமிருந்து நீ அறிந்து கொள். இஃதொப்ப நாங்கள் கூறினால், உடனடியாக அடுத்த வினா வரும், மாற்று மதத்தவர்கள் என்ன செய்வது ? என்று. எம்மைப் பொறுத்தவரை அவரவர் உணர்ந்த வழிபாட்டினை செய்தால் அது இறை வழிபாட்டிற்கு எந்தவிதமான பங்கத்தையும் தராது என்பது யாம் கூறுகின்ற கருத்தாகும். இருந்தாலும் இந்த மார்க்கத்தில் பிறந்ததால் கூறுகிறோம். இஃதொப்ப தில தர்ப்பணம் அல்லது தில ஹோமம் என்பது அஃதொப்ப ஒரு மனிதனின் பூர்வீக பாவங்களைக் குறைப்பதற்கும், அந்த மனிதன் பிறந்த குடும்பத்திலே தொடர்ந்து வரும் சாபங்களையும், தோஷங்களையும் நீக்குவதற்கும் பேருதவியாக இருக்கும். இஃதோடு பைரவர் வழிபாடும், கூடுதலாக பலவிதமான தர்ம காரியங்களும் செய்தால் இந்த தில தர்ப்பணத்தின் பலன் சடுதியில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனருளால் கிட்டும்.
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
திங்கள், 13 நவம்பர், 2017
தில ஹோமம் செய்வதினால் வரும் சிறப்பு பலன் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
இறைவனின் கருணையாலே இது குறித்து பலமுறை கூறியிருக்கிறோம். சுருக்கமாகக் கூறுகிறோமப்பா. ஏற்கனவே கேட்ட மனிதனிடமிருந்து நீ அறிந்து கொள். இஃதொப்ப நாங்கள் கூறினால், உடனடியாக அடுத்த வினா வரும், மாற்று மதத்தவர்கள் என்ன செய்வது ? என்று. எம்மைப் பொறுத்தவரை அவரவர் உணர்ந்த வழிபாட்டினை செய்தால் அது இறை வழிபாட்டிற்கு எந்தவிதமான பங்கத்தையும் தராது என்பது யாம் கூறுகின்ற கருத்தாகும். இருந்தாலும் இந்த மார்க்கத்தில் பிறந்ததால் கூறுகிறோம். இஃதொப்ப தில தர்ப்பணம் அல்லது தில ஹோமம் என்பது அஃதொப்ப ஒரு மனிதனின் பூர்வீக பாவங்களைக் குறைப்பதற்கும், அந்த மனிதன் பிறந்த குடும்பத்திலே தொடர்ந்து வரும் சாபங்களையும், தோஷங்களையும் நீக்குவதற்கும் பேருதவியாக இருக்கும். இஃதோடு பைரவர் வழிபாடும், கூடுதலாக பலவிதமான தர்ம காரியங்களும் செய்தால் இந்த தில தர்ப்பணத்தின் பலன் சடுதியில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனருளால் கிட்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக