திங்கள், 13 நவம்பர், 2017

ஜேஷ்டாதேவி பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு


இறைவனின் கருணையால் யாங்கள் அடிக்கடி கூறுவது போல பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக, சகோதரனாக, கணவனாக, அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம்  உருமாற்றம் அடைகிறானோ, அப்படித்தான் பரம்பொருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இஃதொப்ப நிலையிலே துயில்(தூக்கம்) தொடர்பான பிரச்சினைகள், அமைதியற்ற மனம் கொண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து கொண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.

 தல வரலாறு
 
 மூலவர் :பசுபதீஸ்வரர்
அம்மன் :சாந்த நாயகி
தல விருட்சம்: வில்வம்
ஊர் :திருக்கொண்டீஸ்வரம்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். பிராகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன. காமதேனு வழிபட்ட தலம்.

 "கொண்டி' என்றால் "துஷ்ட மாடு' என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப்படுகிறது. அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள்.  இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள். 

முகவரி:
அருள்மிகு சாந்தநாயகி சமேத பசுபதீஸ்வரர் 
திருக்கண்டீஸ்வரம். (வழி) சன்னாநல்லூர்,
நன்னிலம் ஆர்எம்எஸ்,
திருவாரூர்- 610 001. 
போன் 04366 228 033

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக