ஞாயிறு, 1 அக்டோபர், 2017

குடல் பிணி தீர அகத்தியர் ஜீவநாடியில் அகத்தியர் கூறிய வழி




இறைவனின் கருணையாலே ஒரு உறுத்தலான குடல் பிணி என்றும், அதனால் மனிதன் அடிக்கடி ஒதுங்க வேண்டிய நிலை இருப்பதும் இவ்வாறு மருத்துவத்தால் அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையான கர்மப்பிணிதான். இஃதொப்ப நிலையிலே 100 அல்லது 100 – க்கு மேற்பட்ட அகவை(வயது ) உடைய ஸ்தல விருக்ஷங்களில்(மரம்) இருந்து இயல்பாக கீழே விழுந்த இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, பொடித்து அதிகாலையில் சூன்ய அகத்திலே(வெறும் வயிறு ) உண்ணலாம். அல்லது நீர் விட்டு காய்ச்சி கஷாயமாகவும் ஏற்று வரலாம். இதிலே வேம்பு பிரதானம் பெறுகிறது. இஃதொப்ப வன்னி மரத்து இலையும் பிரதானம் பெறுகிறது. ஆனாலும் கூட, இந்த ஒன்றே போதுமானது என்று நாங்கள் கூறவில்லை. இஃதோடு மேலும் முன்னர் கூறிய வழிமுறைகளை குறிப்பாக  பிணி நீக்கும் ஆலயங்கள் என்று மனிதர்களால் கருதப்படுகின்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் இஃதொப்ப நல்விதமாய் அஃது தொடர்பான பிணிகள் கொண்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வதும் தொடர்ந்து உயர், உயர், உயர், உயர், உயர்வான அன்ன சேவைகளை செய்வதும் இந்தப் பிணியிலிருந்து வெளியே வருவதற்கு தக்க வாய்ப்பாக இருக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக