திங்கள், 31 ஜூலை, 2017

அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - அப்படியென்றால் பிரபஞ்சத்தில் அனைவரும் திருந்தி வாழ வழியே இல்லையா ?


அதற்கு வழிகாட்டினால் அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.

இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எஃதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ, மகான்களோ, மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பலகோடி தவங்கள் செய்து, மனிதனைவிட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ, யக்ஷனாகவோ இருக்கக்கூடிய ஒருவன் எஃதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் “ இறைவனை தூஷிக்கிறானே, நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது “ என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா ? எதற்காக தக்ஷன் ( செய்த ) யாகத்தில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் ? விதி. நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும் இறைத்தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ, அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எஃதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், நீ கூறியதுபோல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கிவிட வேண்டிய நிலையில் மனிதனோ, தேவர்களோ, மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இஃதொப்ப நிலை உருவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக