திங்கள், 31 ஜூலை, 2017

அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - ஆதியிலே பாவ வினைகள் எப்படி ஏற்பட்டது ?


பாவம் என்பதே, பரம்பொருள் ஏகனாக இருக்கும்பொழுது சகலமும் பரம் என்ற நிலையில் இல்லை. பரம் தன்னுடைய தரம் தாழும் என்று அறிந்தோ, அறியாமலேயோ தன்னிடமிருந்து சிறிய, சிறிய ஆத்மாக்களையெல்லாம் பிரித்து அனுப்பும்பொழுதே அங்கே பாவங்கள் உற்பத்தியாகிவிடுகிறது. எல்லாவகையிலும் சுகத்தையும், எல்லா வகையிலும் உயர்வையும் தந்து ஒரு பிறவியை முதலில் படைக்கும்பொழுதே ‘ தனக்கு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது, பிறருக்கு நன்மைகளை செய்வதற்குதான் ‘ என்று மனிதனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களோ சமயத்தில் புரிந்துகொள்ளாமல் ஆணவத்தால் தவறுகள் இழைக்கும்பொழுது அங்கே முதல் பாவம் தோன்றுகிறது. அந்த முதல் பாவத்தால் சற்றே தரம் குறைந்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கே பாவத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் தந்தாலும் நீக்குவதற்கு பதிலாக, மேலும், மேலும் பாவங்களை சேர்த்துக் கொள்ள, அடுத்தடுத்து பிறவிகள் சங்கிலி போல நீள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக