திங்கள், 31 ஜூலை, 2017

அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - சத்சங்கத்திற்கு ரிஷிகளின், சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைத்ததா ?


இறைவன் கருணையால் சப்தரிஷிகளும் அங்குதான் இருந்தார்கள். ஆனால் ( சத்சங்கத்திற்கு ) வந்திருந்தவர்களில் எத்தனைபேர் இதை உணரக்கூடிய நிலையில் இருந்தார்கள் ? ஏதோ கலைக்காட்சிக்கு வருவதுபோலதான் வந்தார்கள். இதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. அவர்களையும் பண்படுத்தி மேலே ஏற்றவேண்டும் என்பதே பொருள். வேறு ஏதும் வேண்டாமப்பா. இறையிடமும், எம்மிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலெல்லாம் அறிவை பயன்படுத்தாத மனிதன், எம்மிடம் வரும்பொழுது மட்டும்தான் ஏன் ? எதற்கு ? எப்படி ? இதை எப்படி ஏற்பது ? இதற்கும், நடைமுறைக்கும் முரணாக இருக்கிறதே ? இப்படியெல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே ? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்திபோல் சிந்திக்கிறான். இல்லையில்லை, அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக