இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு, தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இஃதொப்ப நிலையிலே முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு, வேறு நிலைதான். 3000 ஆண்டுகள் என்பதை மனிதரீதியாக பார்க்கக்கூடாது. அது தேவ ஆண்டுகளைவிட மிக அதிக கணக்கு. எனவே சூட்சுமமான நிலையில் அன்னவன் ( திருமூலன் ) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்துகொள்வது என்பது மிக கடினம். அதுமட்டுமல்ல. இதுபோன்ற ஞான நிலையை அடைந்த, சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால், ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளே மெய்ப்பொருளாகும்.
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
திங்கள், 31 ஜூலை, 2017
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - 4
இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு, தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இஃதொப்ப நிலையிலே முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு, வேறு நிலைதான். 3000 ஆண்டுகள் என்பதை மனிதரீதியாக பார்க்கக்கூடாது. அது தேவ ஆண்டுகளைவிட மிக அதிக கணக்கு. எனவே சூட்சுமமான நிலையில் அன்னவன் ( திருமூலன் ) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்துகொள்வது என்பது மிக கடினம். அதுமட்டுமல்ல. இதுபோன்ற ஞான நிலையை அடைந்த, சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால், ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளே மெய்ப்பொருளாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக