மாட்டுகிறேன் யென்மகனே மாணாகேளு
மகத்தான கற்பமென்ற மார்க்கஞ்சொல்வேன்
பூட்டுகிறேன் சிகாரமென்ற நெல்லிச்சேறு
புதுமையுள்ள மகாரமென்ற நீருஞ்சேரு
ஆட்டுகிற ஆதிவஸ்தை யதிலேசேரு
யடங்காத யென்றாள் வஸ்துஞ்சேரு
நாட்டுகிற நாலையுந்தா யென்றதாக
நலமான தேவியைத்தா னாட்டுவாயே.
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 13
விளக்கம்:
இந்த பாடலில் முருகப் பெருமான் தனது மாணாக்கன் ஆகிய அகத்திய பெருமானுக்கு எது உண்மையான கற்பம் என்று போதிக்கிறார்.கற்பம் என்பது வெளியில் இல்லை இந்த பிண்டத்திலே அது உள்ளது என்று அதற்குரிய மந்திரைத்தை கூறி முருகப் பெருமான் பதிமூன்றாவது பாடலை நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக