புதன், 24 ஜனவரி, 2018

தில்லை சிதம்பரம் மணலூரில் ஸ்ரீ ராஜேஸ்வரி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்



ஆன்மீக அன்பர்களே,

இவ்வுலகின் நடுமையமாக கொண்டுள்ள பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் தில்லை எனும்  சிதம்பரம் ஷேத்திரத்தில் தமிழ் மொழியை பரமேஸ்வரனிடம் பெற்று  இவ்வுலகில் தமிழ் எங்கும் தழைத்தோங்க மாமுனிவராகவும் சித்தர்களின் தலையாய சித்தராகவும் விளங்கக்கூடிய ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நம் பதியில் ஊமையொருபாகமாகவும் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்  பெருமானுக்கு ஆலயம் புனரமைத்தும்,புதியதாக கன்னி மூலையில் கன்னி மூல கணபதியும்,அகில உலகையும் காத்து ரட்சித்து அருளமுதம் புரியும் அன்னை அலைமகள்,கலைமகள்,மலைமகள் என முப்பெரும் தேவியின் ரூபமாக விளங்கக் கூடிய பராசக்தியை இங்கு ஸ்ரீ ராஜேஸ்வரியாக அமைத்தும் துவாரத்தில் பால கணபதி,பாலமுருகன்,கலியுக கண் கண்ட தெய்வமாம் மாருதி என பெயர் பெறும் சஞ்சீவி மலையை தாங்கி கொண்டும் மக்கள் இன்னல் தீர இங்கு சப்தமுக ஆஞ்சனேயராக  வடிவெடுத்து ஆலயம் கொண்டுள்ள மூர்த்திகளுக்கும் மற்றும் பதிணெட்டு சித்தர்கள் பிரதிஷ்டை செய்து அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் விழாவானது ஏவிளம்பி வருடம் தை மாதம் 22ம் நாள் (04-02-2018) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் விண்மீன் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09:30 மணிக்குமேல் 09:45க்குள் மீன லக்கினத்தில்   ஸ்ரீ ராஜேஸ்வரி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலய அஷ்ட பந்தன  மஹா  கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது.

இது சமயம் அகத்தியர் அடியவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

முகவரி:

 ஸ்ரீ ராஜேஸ்வரி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலயம்
செந்தாமரை நகர் ,மணலூர், சிதம்பரம்.
தொடர்புக்கு :   9442968555,9080557302             






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக