புதன், 1 நவம்பர், 2017

விஷ சுரம் தீர ஜீவ கருணை நாடியில் அகத்திய பெருமான் முக்கிய அறிவிப்பு



ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானின் கருணை நாடியில் உலக மக்கள் நன்மைக்காகவும்,தற்போது தமிழகத்தில் பரவியிருக்கும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் விஷ சுரமானது மேலும் பரவாமல் இருந்து உலக உயிர்கள் காப்பாற்றபட வேண்டி தஞ்சாவூரில் உள்ள புண்ணைநல்லூர் எனும் திவ்ய தலத்தில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 108 கலசங்களால் அபிஷேகமும் மற்றும் சுமங்கலி பூஜை தானமும் செய்ய ஸ்ரீ மகா குரு அகஸ்தியர் பணித்திருக்கிறார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை 03-11-2017 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை 108 கலச பூஜை நிகழ உள்ளது.

உலக மக்கள் எல்லாம் தங்கள் பகுதியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து 108 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தமிழகத்தில் நிலவும் உயிர் பலிகள் குறைந்து சாந்தி நிலவும்.இதைக் காணும் மாந்தர்கள்,சித்தர்வழி செல்வோர்,ஆன்மிக பெருமக்கள்,தாய் மார்கள் என அனைவரும் வழிபாடு செய்ய வேண்டுகின்றோம் .

ஸ்ரீ மகா மாரியின் அருளால் தமிழகம் நோயற்று வாழட்டும் .

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு 


தஞ்சாவூர் - நீடாமங்கலம் சாலையில் சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

18 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ் தான் இந்த கோவிலை கட்டினார். அதற்க்கு முன்பு புற்று வடிவில் தான் இந்த ஆலயம் இருந்தது. அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உள்ளது.

ஒரு முறை வெங்கோஜி மகாராஜா சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்த பொழுது கனவில் வந்த மாரியம்மன் தஞ்சையை அடுத்த ஒரு புன்னை மர காட்டில் தான் இருப்பதாக சொல்கிறார். உடனே அங்கு விரைந்த மன்னர் புன்னை காட்டில் ஒரு வெள்ளை எறும்பு புற்றை காண்கிறார் அந்த இடத்திலயே ஆலயம் எழுப்புகிறார்.

பின்பு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னரும் இந்த கோவிலை புனரமைத்தார். ஒரு முறை துலஜா ராஜாவின் மகளுக்கு கண் பார்வை இழந்த போது புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டி பார்வை திரும்ப கிடைத்ததாக சொல்லபடுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர்  இந்த கோவிலுக்கு வந்து புற்றில் மாரியம்மன் முக வடிவை அமைத்ததாகவும் ஸ்ரீசக்ரம் பதித்ததாகவும் சொல்லபடுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக