வியாழன், 5 அக்டோபர், 2017

தன் சீடன் எப்படி இருப்பான் என்று ஸ்ரீ அகத்தியர் கூறிய பாடல்


என்னுடைய பிள்ளை என்றால் அறிவான் தீட்சை
எத்தொழிலுங் கற்றறிவான் சித்தனாவான் 
என்னுடைய பேர்சொல்லுவான் தன்னைப்பார்ப்பான் 
ஏரியே கரைதாண்டி அகண்டமேவி 
என்னுடைய பொதிகைதனில் என்னைக் காண்பான் 
எல்லோர்க்கும் குருவாவான் என்னைத்தானும் 
தன்னுடைய குரு என்பான் தாயைப் போற்றி 
சதகோடி சித்தும் எடுத்து ஆடுவானே 
-அகஸ்தியர் கேசரிகுருநூல்,பாடல் 54

விளக்கம்:

என்னுடைய பிள்ளை என்றால் சிவன் மற்றும் சக்தி தீட்சை பற்றி அறிந்து இருப்பான்.தொழில் எனப்படும் பஞ்ச பூத சக்திகளை அறிந்து அதை முறைப்படி உபயோகித்து சித்தன் ஆவான்.ஓம் அகத்தீசாய நம என்றும்,எல்லாமே அகத்தியர் என்று கூறுவான்.அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என்று தன்னை உணர்வான்.ஆறு ஆதாரம் கடந்து பொதிகை எனும் சுழிமுனையில் என்னை சோதி சொரூபமாக காண்பான்.எல்லா மக்களுக்கும் ஞானத்தை போதிக்கும் குருவும் ஆவான்.என்னை அவனுடைய குரு என்பான்.தாய் எனப்படும் அண்டங்கள் போற்றும் வாலை தெய்வத்தை போற்றி நூறு கோடி சித்தும் செய்வான் என்று கூறி அகத்திய பெருமான் இந்த பாடலை நிறைவு செய்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக