செவ்வாய், 31 அக்டோபர், 2017

பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் மாமகரிஷி மரீசி சித்தர் எழுந்தருள சித்தம்



சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மருதேரி கிராமத்தில் பிருகு மகரிஷி அருள் நிலையம் அமைந்துள்ளது.பிருகு மகரிஷி,ஸ்ரீ அகத்தியர் ,ஸ்ரீ நந்தி தேவர் ஜீவ நாடியில் இடப்படும் உத்தரவுப்படி ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரம் அன்று சித்தர் மற்றும் ஜோதி வழிபாடுகள் நடைப்பெற்று பின் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இந்த பூஜையில் ஏற்றப்படும் ஜோதியில் சித்தர்கள் எழுந்தருளி மற்றும் அதை தொடர்ந்து ஜீவ நாடியிலும் சித்தர்கள் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்

வரும்  ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று (06/11/2017) காலை 8.00 மணியளவில் மாமகரிஷி மரீசி சித்தர் மருதேரியில் எழந்தருள உள்ளார். அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாமகரிஷி மரீசி அவர்களின் வரலாறு 

மரீசி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மாவின் குமாரன் ஆவார். மரீசி மகரிஷியின் மனைவிக்கு கலை என்றுபெயர். இவர்களுக்கு காசியப மகரிஷி என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர். மேலும் மரீசி சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு பெரும் ரிசிகளுள் ஒருவரும், பிரம்மாவின் படைப்பு தொழிலை செய்ய உருவாக்கப்பெற்ற பிரஜாபதிகளுள் ஒருவருமாவார்

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார். ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சன், வசிட்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார்

ஒரு முறை மரீசி சிவபெருமானை 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி வணங்க முடிவுசெய்தார். ஆனால் கையிலை முழுவதும் நீர்நிலைகள் பனியாக உறைந்து நின்றன. தாந்திரீக முறைப்படி குளித்து ஈர உடையுடனே வழிபடவேண்டும் என்ற நியதியுள்ளதால் மரீசியால் சிவபெருமானை வணங்க இயலவில்லை. எனவே தனது தந்தையான பிரம்மாவிடம் அபயம் வேண்டினார்.

பிரம்மாவும் கைலாயம் மலையிலுள்ள பனிக்கட்டிகளை உருகச் செய்து அதிலிருந்து மானசரோவர் என்ற ஏரியை உருவாக்கி தந்தார்.


பார்கவ புராணத்தில் மரீசி மகரிஷி..... 

பிரமனிடம் கேட்டான் அவர் மகன் மரீசி,
“பரம்பொருள் என்பவர் உண்மையில் யார்?

முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளின்
உத்தமமான தலைவன் யார் தந்தையே?”

“மும் மூர்த்திகளைப் படைத்தவர் விநாயகர்;
முத்தொழில்களை அளித்தவரும் விநாயகர்.

முழுமுதற் கடவுள் ஆவார் விநாயகர் – அண்டம்
முழுவதும் வியாபித்து இருப்பவர் விநாயகர்.”

பக்தி பூண்டார் மரீசி விநாயகப் பெருமான் மீது;
மிக்க அன்புடன் தவம் புரிந்தார் விநாயகர் மீது.

காட்சி தந்தார் கனிவுடன் விநாயக பெருமான்,
“கேட்பாய் மரீசி நீ விரும்பும் வரங்களை!” என

“பார்வதி தேவி பிறக்க வேண்டும் என் மகளாக;
ஆர்வத்துடன் தரவேண்டும் அவளை உமக்கே!”

அனுக்ரஹம் செய்து அருளினார் விநாயகர்;
அங்கிருந்து மறைந்து அருளினார் பின்னர்.

சத்தியலோகம் திரும்பினார் மரீசி – தான்
சாதித்துப் பெற்ற வரங்களைக் கூறினார்.

வேதவல்லி என்ற கன்னியைப் படைத்தான்;
வேதநாயகன் மணம் செய்வித்தான் உடனே!.

 பகவத்கீதையில் மரீசி மகரிஷி........... 

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ

ஆதித்யாநாம் விஷ்ணு-ஆதித்யர்களில் நான் விஷ்ணு, ஜ்யோதிஷாம் அம்ஸுமாந் ரவி:-ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன், மருதாம் மரீசி:-வாயு தேவர்களில் நான் மரீசி, நக்ஷத்ராணாம் அஹம் ஸஸீ அஹம் அஸ்மி-நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன்.

பொருள் : ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக