செவ்வாய், 31 அக்டோபர், 2017

பதினென் சித்தர்களில் முதல்வரான திருமூலர் பெருமானுக்கு குரு பூஜை





63 நாயன்மார்களில் ஒருவரும், 18 சித்தர்களில் முதல்வருமான திருமூலரின் குரு பூஜையை வருடம்தோறும் ஐப்பசி மாத அசுபதி நட்சத்திர நாள் அன்று இறைஅன்பர்கள் பல ஊர்களில் வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு திருமூலர் குருபூஜை நவம்பர் மாதம் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3/11/2017 அன்று வருகின்றது.

1) திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் தலைமையில், திருக்கோயிலில் அமைந்துள்ள திருமூலர் தனி சன்னதியிலும்,

2) கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள 69, சாத்தனூர் கிராமத்தில் திருமூலர் சன்னதியிலும்,

3) ஆத்தூர்- சின்னசேலம் சாலையில் தென் பொன்பரப்பி, சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திலும்,

4) சென்னை, எம்.ஜி.ஆர் நகரில் இறைதூதர் திருமூலர் குருபூஜை
தமிழ்நாடு தெய்வீக மக்கள் கூட்டமைப்பு நடத்தும் 4 நாள் திருமந்திர வேள்வி சக்தி விநாயகர் ஆலயத்திலும்,

5) சென்னை தாம்பரத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள திருமூலர் ஆலயத்திலும்,

6) சென்னை மைலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் இரண்டு நாள் திருமந்திர மாநாடும்,

7) திருச்சியில் திருவரங்கம், அம்மா மண்டபம் அருகில் திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை நடத்தும் குருபூஜை சிருங்கேரி சங்கர மடத்திலும்

சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது. திருமந்திர ஆர்வலர்கள், சைவ- தமிழ் அன்பர்கள் அருகே நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.

-நன்றி
திரு.செந்தில்குமார் சித்தய்யன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக