ஞாயிறு, 22 அக்டோபர், 2017

குமரகுருபரரை பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இறைவனின் அருளைக்கொண்டு இஃதொப்ப மழலை பேசும் என்று மழலையைப் பெற்ற பெற்றோருக்கு மழலை பேசுமா ? என்கிற ஐயம். வந்தபொழுது மழலை பேசும் என்று சீரலைவாய் முருகன் காட்டிய காட்சிதான் அந்த குமரகுருபரரின் காதையாகும். இஃதொப்ப முருகப்பெருமானின் பரிபூரண கருணையை பெற்று, அஃதொப்ப பேசும் ஆற்றல் மட்டுமல்லாமல் பாடும் ஆற்றலையும் பெற்று நல்ல முறையிலே தமிழையெல்லாம் கற்று அன்னை கலைவாணி மீது சகலகலாவல்லி மாலையை இயற்றி அதன் மூலம் ஆண்ட மன்னர்களையெல்லாம் வென்று அங்குள்ள வடபுல புலவர்களையெல்லாம் அந்த வடமொழியிலேயே வாதிட்டு வென்றவன்தான் இந்த குமரகுருபரன். இது அண்மையில் நடந்த நிகழ்வுதான்.

இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் “ இறைவன் எனக்கு அருள்கிறார். அல்லது இறைவன் தரிசனம் எனக்கு கிடைத்திருக்கிறது அல்லது இறைவனின் கருணை எனக்கு கிடைத்திருக்கிறது “ என்பதை மனிதன், மற்ற மனிதரிடம் அதை பகிர்ந்துகொண்டு, அவர்கள் அதை ஒத்துக்கொண்டால்தான் இந்த மனிதனுக்கு ஆறுதல் கிட்டுகிறது. அப்படியில்லாத வரையில் இவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நல்ல சாத்வீக எண்ணத்தோடு இஃதொப்ப இறை வழியில் சென்றால் ஒவ்வொரு குழந்தையும் குமரகுருபரர் ஆகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக