ஸ்தல வரலாறு
இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட புறநானூறு என்னும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் திருவட்டாறு ஊர் பற்றிய குறிப்பு வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு நம்மாழ்வார் இவ்வூரில் நிலை பெற்ற பெருமானை "வாட்டற்றன்" கேசவன் என்கிறார்.
முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு உட்பட 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இக்கோவில் சோழர்கள், வேணாட்டு அரசர்கள், திருவிதாங்கூர் அரசர்கள் ஆகிய மூன்று மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலின் உண்ணாழியைச் சுற்றி அமைந்துள்ள திருசுற்று மாளிகை, தஞ்சை பெரிய கோயில் திருசுற்று மாளிகை பாணியில் சிறிய அளவில் அமைந்து சோழர் கலைப் பணியை நினைவூட்டுகிறது.
இத்திருத்தலத்தைச் சுற்றியோடும் ஆற்றின் நடுவே 18படிகளின் மேல் அமைந்த பூமி அரங்கத்தில் 3 ஏக்கர் ௨௧ செண்டு நிலப்பரப்பில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளப் பாணி கலந்து உருவாக்கப்பட்ட இக்கோவிலில் நான்கு வெளிப்பிரகாரங்களிலும் 224 தூண்களில் பாவை விளக்குகள் உள்ளன. இப்பாவை விளக்குகள் தீப லட்சுமி என அழைக்கப்படும். இவற்றில் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது இதன் சிறப்பு. இந்த தூண்களில் 2300 சிற்பங்களுக்கு மேல் உள்ளன. பிரகாரம் 80 மீட்டர் நீளமுடையது. இதன் அகலம் 6.10 மீட்டர்.
இக்கோவிலின் ஸ்ரீபலி மண்டபத்திலும் நாலம்பலத்திலும் அபூர்வமான சிற்பங்கள் உள்ளன. ஸ்ரீபலி மண்டபம் 13.15 மீட்டர் நீளமும் 12.40 மீட்டர் அகலமும் உள்ளது. நாலம்பலம் 42.50 நீளமும் 36.50 அகலமும் உடையது.
புராண இதிகாச காட்சிகளை விவரிக்கும் மிக அற்புதமான மரச் சிற்பங்கள், ஒற்றைக்கல் மண்டபம், உதய மார்த்தாண்ட நமஸ்கார மண்டபம் மற்றும் சாஸ்தா கோவில் முன் மண்டப விதானங்களை அலங்கரிக்கும். கருவறையின் எதிரே உள்ள 18அடி "18அடி" 1 அடி அளவில் ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.
கோவில் கருவறைத் தெய்வம் 22அடி (6.60 மீட்டர்) நீளமுடையது. பாம்பணை மேல் பள்ளி கொண்ட மூலவர் 16008 சாளக் கிராமம் உள்ளடங்கிய கடு சக்கரைப் படிமம் ஆகும். ஆதி கேசவன் மேற்கு நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். அவரது நாபியில் பிரம்மா இல்லை. ஸ்ரீ கோயில் அற்புத விமானம், வகையைச் சார்ந்தது. செம்பு தகட்டால் வேயப்பட்டது. இதில் தங்க மூலம் பூசப்பட்ட ஐந்து கலசங்கள் உள்ளன
முகவரி:
அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு-629 17

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக