திங்கள், 4 செப்டம்பர், 2017

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு




எல்லா ஸ்தலங்களிலும் எல்லாவகையான பாக்கியங்களையும் ஒரு மனிதன் பெறலாம். இது பொது நியதி. பிறகு எதற்கு இந்த பிரச்சினை என்றால் இந்த ஸ்தலம் செல்ல வேண்டும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள் ? என்றால் அப்படியாவது அந்த பிரச்சினை யாருக்கு இருக்கிறதோ, அந்த பிரச்சினை யாரை வாட்டுகிறதோ அந்த மனிதன் அதனை ஒருமுகமாக எண்ணி ‘ இதோ ! இந்த ஆலயத்திற்கு வந்துவிட்டேன். இதோ ! மனம் ஒன்றி இந்த இறைவனை வணங்கிவிட்டேன். எனவே இந்த பிரச்சினை இனி என்னை விட்டுப்போகும் ‘ என்று ஒரு தீவிர நம்பிக்கையை கொண்டு வருவான். அதற்காகத்தான் இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எல்லா ஆலயங்களும் சிறப்புதான். இருந்தாலும் இன்னவன் கூறுகின்ற ஆலயமும் இஃதொப்ப ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள், புதன் தோஷம் இருப்பவர்கள் இஃதொப்ப அதனை சார்ந்து ( லோகாய ரீதியாக மட்டும் கூறுகிறோம். இதனை வேறுவிதமாக புரிந்துகொள்ளக்கூடாது ) லோகாய ரீதியாக எத்தனைதான் உழைத்தாலும் செல்வம் சேரவில்லை. செல்வம் வந்தாலும் நேரிய வழியில் செலவை விருப்பம்போல் செய்யமுடியாமல் வீண் வழியில் செல்கிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் சென்று வணங்கவேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் பல்வேறு சிறப்புகளை காலப்போக்கில் புரிந்துகொள்ளலாம்.


ஸ்தல வரலாறு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட புறநானூறு என்னும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் திருவட்டாறு ஊர் பற்றிய குறிப்பு வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு நம்மாழ்வார் இவ்வூரில் நிலை பெற்ற பெருமானை "வாட்டற்றன்" கேசவன் என்கிறார்.

முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு உட்பட 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இக்கோவில் சோழர்கள், வேணாட்டு அரசர்கள், திருவிதாங்கூர் அரசர்கள் ஆகிய மூன்று மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலின் உண்ணாழியைச் சுற்றி அமைந்துள்ள திருசுற்று மாளிகை, தஞ்சை பெரிய கோயில் திருசுற்று மாளிகை பாணியில் சிறிய அளவில் அமைந்து சோழர் கலைப் பணியை நினைவூட்டுகிறது.
இத்திருத்தலத்தைச் சுற்றியோடும் ஆற்றின் நடுவே 18படிகளின் மேல் அமைந்த பூமி அரங்கத்தில் 3 ஏக்கர் ௨௧ செண்டு நிலப்பரப்பில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளப் பாணி கலந்து உருவாக்கப்பட்ட இக்கோவிலில் நான்கு வெளிப்பிரகாரங்களிலும் 224 தூண்களில் பாவை விளக்குகள் உள்ளன. இப்பாவை விளக்குகள் தீப லட்சுமி என அழைக்கப்படும். இவற்றில் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது இதன் சிறப்பு. இந்த தூண்களில் 2300 சிற்பங்களுக்கு மேல் உள்ளன. பிரகாரம் 80 மீட்டர் நீளமுடையது. இதன் அகலம் 6.10 மீட்டர்.

இக்கோவிலின் ஸ்ரீபலி மண்டபத்திலும் நாலம்பலத்திலும் அபூர்வமான சிற்பங்கள் உள்ளன. ஸ்ரீபலி மண்டபம் 13.15 மீட்டர் நீளமும் 12.40 மீட்டர் அகலமும் உள்ளது. நாலம்பலம் 42.50 நீளமும் 36.50 அகலமும் உடையது.

புராண இதிகாச காட்சிகளை விவரிக்கும் மிக அற்புதமான மரச் சிற்பங்கள், ஒற்றைக்கல் மண்டபம், உதய மார்த்தாண்ட நமஸ்கார மண்டபம் மற்றும் சாஸ்தா கோவில் முன் மண்டப விதானங்களை அலங்கரிக்கும். கருவறையின் எதிரே உள்ள 18அடி "18அடி" 1 அடி அளவில் ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.

கோவில் கருவறைத் தெய்வம் 22அடி (6.60 மீட்டர்) நீளமுடையது. பாம்பணை மேல் பள்ளி கொண்ட மூலவர் 16008 சாளக் கிராமம் உள்ளடங்கிய கடு சக்கரைப் படிமம் ஆகும். ஆதி கேசவன் மேற்கு நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். அவரது நாபியில் பிரம்மா இல்லை. ஸ்ரீ கோயில் அற்புத விமானம், வகையைச் சார்ந்தது. செம்பு தகட்டால் வேயப்பட்டது. இதில் தங்க மூலம் பூசப்பட்ட ஐந்து கலசங்கள் உள்ளன

முகவரி:

அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு-629 17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக