ஒவ்வொ௫ மனிதனும் வாழ்க்கையில் செய்கின்ற தவறுகள் அநேகம். ஒவ்வொ௫ ஸ்தலமும் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தூர தூர பகுதியிலி௫ந்து வ௫ம் மாந்தர்களுக்காக ஏற்பட்டது.அவற்றிலே ஒன்றுதான் இந்த "பிழை தி௫த்தும் கிரியாகும்".மனிதன் மீண்டும் பிழை செய்யாமல் வுள் அன்போடு மனம் வ௫ந்தி ,மன்னிப்பை கேட்டு கொண்டால், இந்த இடத்திலே, அவனுடைய விதி தி௫த்த படும்.எனவே மனிதன் பிழையை மட்டும் அல்ல.அவன் தலை எழுத்தையே தி௫த்த கூடிய மலை ஆகும். அபிஷேகங்கள் தொடர்ந்து செய்ய பிதுர் தோஷங்களும்,பிரம்ம ஹத்தி தோஷங்களும் குறைய வாய்ப்பு வுண்டு
ஸ்தல வரலாறு
‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’ என்னும் திருப்பெயரோடு ஈசன் அமர்ந்து அருளும் தலம் தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள திருதேசமலை (எ) திருத்தியமலை ஆகும்.
திருத்தியமலைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம்
அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.
திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள், தாயினும் நல்லாள்
மூலவர் :சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அம்மன் :தாயினும் நல்லவள்
கோயில் கட்டப்பட்ட ஆண்டு : 5050 வருடங்களுக்கு முன்பு.
அமைவிடம் : திருதேசமலை (எ) திருத்தியமலை
செல்லும் வழி
திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில்,திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ.
திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் பெரமங்கலத்திலிருந்து 10 கி.மீ.
முசிறியிலிருந்து மூவானுர் பாதையில் 15 கி.மீ.
துறையூரிலிருந்து 17 கி.மீ.
முகவரி:-
அருள்மிகு.ஏகபுஷ்ப பிரியநாதர் & தாயினும் நல்லாள் திருக்கோவில்,திருத்தியமலை (அஞ்சல்),
முசிறி (வட்டம்),
திருச்சி (மாவட்டம்),
தமிழ்நாடு -621006.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக