1.மங்கள(செவ்வாய் கிழமை) வாரத்தோடு ஹஸ்த நக்ஷத்ரம் வரும் நாளில்,தீவிர விரதமிருந்து,முருக பெருமானை வழிபட,புத்திர தோஷம் நீங்கும்.
2.ப்ரஹலாதனின் பக்தி,ராவணனின் பக்தி,நாயன்மார்களின் பக்தி,ஆழ்வார்களின் பக்தி,மன உறுதி,மன வலிமை,சித்தர்களைப் போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால்,கட்டாயம் இறை காட்சி கிடைக்கும்.
3.ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது,இரசவாதத்தை விட கடினமானது.வெளியில்
இருந்து வரும் விமர்சனங்களுக்கு கோபப்பட்டால்,ஒருவனால் எப்படி ஆன்மீகத்தில்
மேலே வரமுடியும்?
4.குருவைத் தேடி அலைபவர்கள்,குருவருள் வேண்டும் என்பவர்கள்,ஒன்பது முக தீபத்தை,குரு தட்சிணாமூர்த்திக்கு,புனர்பூசம் நக்ஷத்திர நாளில்,ஏற்றி,அவரின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக