போற்றடா கற்பமுண்டா எனைப்போலாவாய்
புருவத்தின் ஞானமெல்லாம் பொருந்ததோணும்
ஏற்றடா சிங்குவையும் பிடித்துமைந்தா
என்மக்காள் நித்தமுந்தான் பீசங்கூட்டி
வாற்றடா பதின்மூன்று வருசந்தானும்
மைந்தனே கற்பமதை மனதிற்கொள்ளு
சாற்றடா சரவணையு முனக்குத்தோணும்
சண்முகந்தா னென்றுசொல்லி சாற்றலாமே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 10
விளக்கம்:
முன் சொன்னதுதான் போல கற்பம் உண்டா.இதை நாள்தோறும் செய்து வந்தால் எனை போல நீயும் ஆவாய்.எல்லா ஞான சூட்சுமங்களும் உனக்கு புரியும்.இந்த கற்பத்தை தொடர்ந்து பதி மூன்று ஆண்டுகள் சிங்குவையும் அதன் பீஜ மந்திரத்தையும் சேர்த்து சொன்னால் இந்த சராசரத்தின் பொருள் உனக்குள் தோணும்.அப்படி நீ கண்டால் அவனை சண்முகன் என்று கூறலாம் என்று கூறி பத்தாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக