அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - பூ(மி) பாரத்தை குறைப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா இந்த யுத்தத்தை ஏற்படுத்தினாரா ?
இறைவன் அருளால் பூ(மி) பாரமே ஏற்படாமல் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறதா ? இல்லையா ? ( இருக்கிறது ). அப்படியென்றால் எதற்காக ஒன்றை ஏற்படுத்த வேண்டும் ? பிறகு ஒன்றை நீக்க வேண்டும் ? ( புரியவில்லை ஐயனே ). புரியும்பொழுது புரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக