செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஷீரடி சாய்பாபாவை பற்றி அகத்தியர் ஜீவவாக்கு



இறைவனின் கருணையால், மனிதர்களை நல்வழியில் திசை திருப்புவதற்கு அவ்வப்பொழுது இறைவன் பல்வேறு ஞானிகளை படைக்கிறான். சில ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். பல ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாமலேயே மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவன்தான் இன்னவள் விளம்பிய அன்னவன். பல்வேறுவிதமான இறை நிகழ்வை, தன்னை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு இறைவன் செய்ய, தன்னுடைய புண்ணிய பலத்தை அதற்கு இறைவன் பயன்படுத்திக்கொண்டார் என்ற மனநிறைவோடு பல்வேறு மக்களுக்கு நல்லுபதேசங்களையும், கர்மவினை குறித்தும் அந்தந்த சமுதாய சூழலுக்கு ஏற்ப அவன் இறைவன் அருளால் எடுத்து இயம்பியிருக்கிறான். இறைவன் விரும்பி பல்வேறு மகான்களை அனுப்புவது உண்டு. சில மகான்கள் தாமாகவே விரும்பி இதுபோன்ற பணிகளை தேர்ந்தெடுப்பதும் உண்டு. இஃதொப்ப நிலையில் இறைவன் அனுப்பிய மகான்களில் ஒருவனே அவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக