செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

பணியில் நல்ல சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி


இறைவன் கருணையாலே இறை வழியில் நாங்கள் வழிமுறைகளைக் கூறினால் அது மனிதர்களுக்கு ஏற்புடையதாக இராது. அந்தந்த நிறுவனத்திலே யார் அந்த அதிகாரம் பெற்று இருக்கிறானோ அவனைப் பார்த்து சரியாக கவனிக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இருப்பதாக இத்தருணம் யாங்கள் நினைக்கவில்லை. எனவே இதற்கு ஒரே மார்க்கம் என்று நாங்கள் கூறினால் அப்படியெல்லாம் அந்த மனிதன் (இருக்க வேண்டும்) என்றுதானே இருக்கிறது விதியில். அதை மாற்ற வேண்டுமென்றால் நவக்ரகங்களிடம் இறை, அருளாணையிட வேண்டும். ஆனால் இன்னொன்று, பதவி உயர்வு என்பது உண்மையில் உயர்வு என்று மனிதன் எண்ணுகிறான். மனசாட்சி உள்ள மனிதனுக்கு, நேர்மையான மனிதனுக்கு இந்தக் கலிகாலத்தில் பதவி உயர்வு என்பது ஒருவகையான தண்டனை. இறைவன் அருளாலே குருவாரம்(வியாழக்கிழமை), சனகாதி முனிவரோடு குரு தட்சிணாமூர்த்தியை மௌனமாக, குரு தட்சிணாமூர்த்தியின் அஷ்டகத்தை ஓதி விரதமிருந்து வழிபட்டால் ஒரு வேளை " இது வேண்டும் " என்று எண்ணுகின்ற ஆத்மாக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஆசிகள்.

 சனகாதி முனிவர் வழிபாடு

சனகாதி முனிவர்கள், சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

ஓம் சனகர் திருவடிகள் போற்றி
ஓம் சதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சனாநந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சனத்குமாரர் திருவடிகள் போற்றி

என்று வழிபட வேண்டும்.பின்பு பின் வரும் தட்சிணாமூர்த்தியின் அஷ்டகத்தை ஓத வேண்டும்.

தட்சிணாமூர்த்தி அஷ்டகம் - வ்ருஷ தேவர் அருளியது

(1) அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(2) நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(3) த்ரிபுவனகுரும் ஆகமக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(4) அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(5) க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(6) த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(7) யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(8) ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(9) வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக