செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வலிப்பு நோய் நீங்க ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி



இறைவனின் கருணையாலே ‘ வெண்மனம் “ (திருவெண்காடு) என்கிற ஸ்தலம் இருக்கிறது. புதனுக்கு ஏற்ற ஸ்தலம் என்று கூறுவார்கள். அங்கு சென்று வழிபாடு செய்வதும்,


அஃதொப்ப மதுரையம்பதி சென்று அன்னை மீனாளின் திருவடியை ( மதுரை மீனாட்சியம்மன் கோவில்)  வழிபாடு செய்வதும் இஃது போக நவக்ரக வழிபாடும், தன்வந்திரி வழிபாடும் பக்திமார்க்கத்திலே இஃதொப்ப பிணியைக் குறைக்க உதவும். இஃதோடு அன்றாடம் உச்சிப்பொழுதிற்கு முன்பாக எஃதாவது அன்று பறிக்கப்பட்ட பசுந்தளிரான கீரைகளை உணவிலே கட்டாயம் ஏற்றுக்கொண்டு வந்தால், தொடர்ந்து இந்த உணவு முறையை விடாப்பிடியாகக் கடைபிடித்தால், இஃதோடு தக்க மருத்துவம் எடுத்துக் கொண்டால்  விரைவில் கர்ம வினையிலிருந்து விடுபட்டு இந்தப் பிணி நீங்கும்.



நவகிரக காயத்ரி மந்திரம்

 சூர்ய காயத்ரி                 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                             பாஸ அஸ்தாய தீமஹி 
                                             தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி               ஓம் பத்மத்வஜாய வித்மஹே
                                             ஹேம ரூபாய தீமஹி
                                             தன்னோ ஸோம ப்ரசோதயாத்

செவ்வாய் காயத்ரி        ஓம் வீரத்வஜாய வித்மஹே
                                            விக்ன அஸ்தாய தீமஹி
                                               தன்னோ பெளம ப்ரசோதயாத்

புதன் காயத்ரி                  ஓம் கஜத்வஜாய வித்மஹே
                                              சுக அஸ்தாய தீமஹி
                                              தன்னோ புத ப்ரசோதயாத்

குரு காயத்ரி                     ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
                                              க்ருணி அஸ்தாய தீமஹி
                                              தன்னோ குரு ப்ரசோதயாத்

சுக்கிரன் காயத்ரி            ஓம் அச்வத்வஜாய வித்மஹே
                                               தனூர் அஸ்தாய தீமஹி
                                               தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

சனி காயத்ரி                     ஓம் காகத்வஜாய வித்மஹே
                                              கட்க அஸ்தாய தீமஹி
                                              தன்னோ மந்த ப்ரசோதயாத்

ராகு காயத்ரி                    ஓம் நாகத்வஜாய வித்மஹே
                                              பத்ம அஸ்தாய தீமஹி
                                              தன்னோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி                  ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                              சூல அஸ்தாய தீமஹி
                                              தன்னோ கேது ப்ரசோதயாத்


 தன்வந்த்ரி நாமம்

ஓம் ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக