பகல்வத்தி தீவட்டி யகல்போற்றோணும்
ஆடமே ஐந்தெழுத்து மதிலேதோணும்
அப்புறமுஞ் சங்குதொனி யறிவாய்க் கேட்கும்
நாடவே தமர் திறக்கும் வாசல்தோணும்
நந்தியுட வீற்றிருப்பும் நட்புந்தோணும்
வாடவே வச்சிரமணி விளக்குந்தோணும்
வாலையுட சிலம்பொலியும் வாய்குந்தானே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 7
விளக்கம்:
சுழிமுனை வழியாக ஏறி வரும்போது உடல் எனும் இந்த வீட்டில் எரிகின்ற ஐந்து சக்கரங்களிலும் அகல் ஏற்றி வைத்தது போல் ஒளி தோன்றும் அதை போற்றி முன்னேறினால் ஓம் என்கிற ஓங்கார நாதம் கேட்கும்.நந்தி வீற்றிக்கும் இடத்தை தாண்டி சென்றால் வச்சிரமணி விளக்கு எனும் சோதியை காண்பாய் பின்னர் வாலையுடைய சிலம்பொலியும் கேட்கும் என்று கூறி எழாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

shall we get the full book in pdf format or book in store?
பதிலளிநீக்கு