புதன், 11 ஏப்ரல், 2018

தமிழ் வருடப் பிறப்பு பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



தமிழாகட்டும்,இந்திய,பாரத பாரம்பர்யமாகட்டும்.அனைத்துமே ஜோதிட இயலோடு தொடர்பு உடையது.சித்திரை மாதம் வெயில் தகிக்கிறது என்றால்,மேஷத்திலே சூரியன் உச்சம் என்று பொருள்.கடகத் திங்கள்,ஆடி,ஆனியிலே படிப்படியாக குறைகின்ற வெயில்,மீண்டும் ஆவணியிலே விஸ்வரூபம் எடுக்கும்.அங்கே சிம்மத்திலே ஆட்சி பெறுகிறது.இப்படி வருகின்ற சூரியனானது,துலாத்திலே வலுப்பெறுகிறது.ஐப்பசியில் சூரியன் வலுகுறைந்து நன்றாக மழை பெய்கிறது.இந்த நியதி அடிப்படையில்தான்,தமிழிலே பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.வருடங்களும் அவ்வாறுதான்.தமிழ் வருடம் என்று கூறிக்கொண்டு,பிற வடமொழிக்கலப்பு அதிகமாக இருக்கிறது.இருந்தாலும் கூட.இதுவும் தமிழ்தான்.ஏனென்றால் தமிழில் இருந்துதான் வடமொழிக்கு பல சொற்கள் போயிருக்கிறது.எனவே, ஏனைய இலக்கணங்கள் வசதி,சூழ்நிலைக்கேற்ப,எப்படி பேசினால்,எழுதினால் எளிதோ,அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மொழி இலக்கணமாகும்.ஆனால்,தமிழ் மொழியிலே கூடுதலாக இறை சார்ந்த,இறை அருள் இருக்கிறது.சரியான உச்சரிப்போடு தமிழைப் பேசினாலே,அது சுவாசப்பயிற்சிக்கு சமம்.தமிழ் இலக்கணத்தைப் பற்றிக் கூறினால்,எத்தனையோ அதிசயங்கள்,அற்புதங்கள் உள்ளது.

இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு “தமிழாவது?மொழியாவது?சிறப்பாவது?யார் இவற்றை எல்லாம் கவனிப்பது?வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம்.” என்றெல்லாம் அளந்து கொண்டு இருக்கிறார்கள்.அப்படியல்ல.தமிழ் மொழியிலே காரண,காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை.எனவேதான்,உலகத்திலே எந்த மொழியிலும் “ழ”கரம் என்ற உச்சரிப்பு கிடையாது.மூன்று இனமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது.ஒலிக்குறிப்பே (போதும்),அது எந்த இனம் என்று கூறிவிடலாம்.மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?எந்த தளை,சீர்,எத்தனை அடியிலே அமைக்கப்பட வேண்டும்?என்றெல்லாம் உள்ளது.இதுதான் தமிழின் சிறப்பு.இவ்வாறு மனதிலே இலக்கணத்தை வைத்து யாரும் பாடல்களை புனையவில்லை.அவை,தானாக வந்து அமைந்து விட்டன.உதாரணமாக ஒரு வெண்பா பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்,சாதாரணமாகத் தோன்றும்.ஆனால் உள்ளே மிகப்பெரிய ஞானக்கருத்தெல்லாம் அடங்கியிருக்கும். சமையல் பாட்டுக்களாய் தோன்றுவதெல்லாம்,”மையல்” பாட்டாகவும் இருக்கும்.ஞானப்பாட்டாகவும் இருக்கும்.


பிறக்கவிருக்கும் விளம்பி ஆண்டில் எல்லோரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ வேண்டுகிறோம் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக