ஒரு தில யாகத்தின் பலன் இதில் கிடைக்குமப்பா. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்மா எந்த நிலையில் இருந்தாலும் அதை சற்றே ஒரு படியாவது உயர்த்துவதற்கு இந்த மோக்ஷ தீப கூட்டு வழிபாடு உதவும். ஆன்மா சாந்தி பெறுவதற்கும் அல்லது மீண்டும் ஒரு நல்ல பிறவி எடுப்பதற்கும், அந்த குடும்பத்தில் உள்ள சாபங்கள் தீர்வதற்கும் இந்த வழிபாடு உதவும். உதவிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இறைவனின் அருளாணையால்தான் இப்பொழுது பல இடங்களில் அவற்றை நிகழ்த்த வேண்டாம் என்று நாங்கள் நிறுத்தி வைக்க அருளாணையிட்டிருக்கிறோம். எனவே இதை வேறுவிதமாக எண்ணிவிட வேண்டாம். அஃதொப்ப மட்டுமல்லாது இஃதொப்ப எம் தாரத்தின் மண்ணிலே நீ செய்து வந்த மோக்ஷ தீப வழிபாடு சிறப்பாக இருந்தாலும் கூட பல்வேறு இடர்பாடுகளையெல்லாம் விதிப்படி சந்திக்க வேண்டும் என்பதால்தான் நாங்கள் அதை அமைதிப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும் அதற்காக நீ கலங்க வேண்டாம். மற்ற இடங்களில் நடக்கும் வழிபாடுகளில் நீ கலந்து கொள்ளலாம். மற்ற சேவைகளை நீ தொடர்ந்து செய்து கொண்டே இரு.
திருச்சி உய்யகொண்டான் திருமலையில் மோட்ச தீபம்
தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் (கணேசன் அய்யா) & திருச்சி ததீசி அகமும் இணைந்து இதையும் மற்றும் பல்வேறு அற பணிகள் செய்து வருகிறார்கள்.
அவற்றில் சில
- 500 வாரத்திற்கும் மேலாக செவ்வாய்க்கிழமை திருச்சியை சுற்றி முருகர் அபிசேகம் செய்கிறார்கள்.
- வருடத்திற்கு 4அல்லது 5 முறை கோவில்களுக்கு சிறப்பு அபிசேகம் நடத்தப்படுகிறது.
- அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
- ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்யப்படுகிறது.
- முதியோர் அனாதை இல்லங்களுக்கு உணவு உடை போன்றவை செய்யப்படுகிறது.
- ரோட்டோரம் இருப்பவர்களுக்கு வாரம் தோறும் உணவு அளிக்கப்படுகிறது.
இந்த மாதம் 17-12-2017அமாவாசை அன்று மாலை திருச்சி உய்யகொண்டான் திருமலையில் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
ஆகவே இயன்ற போதெல்லாம் அன்பர்கள் மோட்ச தீப நிகழ்வில் கலந்து கொண்டு மற்ற பணிகளிலும் அனைவரும் பங்கு கொண்டு இறையருள் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறோம்
கோவில் முகவரி :
அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102 ,திருச்சி மாவட்டம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக