அன்பு சார் இறை அன்பர்களே .பல யுகங்களாக இந்த பாரத தேசம் இந்த உலகத்திற்கே ஆன்மீக மையமாய் விளங்கி தர்மத்தின் பிரதான பூமியாய் இந்த பாரத தேசம் விளங்கி வருகிறது . தமிழகம் முழுவதும் கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்னும் நிலையில் நம் முன்னோர்கள் பல லக்ஷ கணக்கான கோவில்களை உருவாக்கி நம் சந்ததிகள் வலிமையோடும் இறைத்தன்மையோடும் வளமோடு வாழ கோவில்களை நிர்மாணித்தனர் . மன்னர்களின் ஆட்சிக்கு பின்னர் இந்த பாரத தேசம் வலிமை குன்றி இந்து சமுதாயமும் ஆலயங்களும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது வியக்க வைக்கும் வனசாஸ்திரமும் . பிறவி அறுக்கும் யோக சாஸ்திரமும் நமக்கு கோவில்கள் மூலமாகவே கால காலமாய் நமக்கு உணர்த்தப்பட்டுவருகிறது . சூரியன் வழிபட கோவில் என்று தமிழகத்தில் பலகோவில்கள் உண்டு .அதில் சூரிய ஒளி லிங்கத்தில் விழும் வைபவம் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் வானில் சூரியனின் கதிர்கள் எந்த நாளில் எந்த நேர்கோட்டில் வரும் என்பதை கணித்து அதற்கான இடத்தை தெறிந்து ஆலயம் அமைத்தவர்கள் நம் முன்னோர். உடலில் குண்டலினியின் வடிவத்தை கோவில்களாக வடித்து அங்கும் மூல லிங்கத்தில் குண்டலினி எழும் காந்த அலைகளை உண்டாக்கும் லிங்க வடிவங்களை அமைத்து நாம் நலமடைய ஆலயங்களை செய்தவர்கள் .நம் முன்னோர்கள் .
ஆனால் இன்று என்ன நடக்கிறது . சித்தர்களின் அறிவியலால் உண்டான ஆலயங்கள் சிதறி கிடக்கிறது . பல கற்கோவில்கள் இன்று மண்மூடி கிடக்கிறது . இந்த உலகுக்கே தர்ம நெறிகளை போதித்த இந்த அற்புத ஆலயங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .இறை அன்பர்களே இந்த தேசம் இன்று வாழ்கிறது என்றால் இந்த தேசத்தின் தர்மத்தாலும் நம் ஆலயங்களின் அறிவியலால் மட்டுமே என்பதை நினைவு கூறுங்கள் .
இனி .. இந்துக்களாகிய நாம் புதிய ஆலயங்களை தயவு செய்து செய்ய வேண்டாம். இருக்கின்ற பழைய ஆலயங்களை புதுப்பிக்கும் பணியை தொடங்குங்கள் .தமிழகம் முழுவது சிதறிக்கிடக்கும் லிங்கங்களையும் அழிந்த கோவில்களின் சிலைகளையும் சிறு குடிசை அமைத்தாவது காப்பாற்றுங்கள் . எந்த கோவில்களின் அறிவியலால் இந்த பாரத தேசம் உலகை வாழவைத்து கொண்டு இருக்கிறதோ அந்த ஆலயங்களை வாழவைக்க அனைவரும் ஒன்று சேருங்கள் .
உங்களின் ஒவ்வொருவரின் கரங்களிலும் ஒரு செங்கல் கொடுத்தால் கூட இந்த தேசத்தில் அழிவடைந்த ஆலயங்களே இருக்காது .உங்களின் பிறந்த நாளில் ஏதேனும் ஒரு ஆலயத்தின் திருப்பணிக்கு கொடுத்து கொண்டாடுங்கள் .60 ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் இந்த தேசத்து பெரியோர்களே . சிறிய ஆலயத்தை சீரமைத்து ஈசனின் நெஞ்சில் இடம் பெறுங்கள் .அந்த புண்ணியம் உங்கள் சந்ததியாரை காக்கும் வீதியிலும் குளங்களிலும் வயல்வெளியில் என பல ஆயிரம் லிங்கங்கள் மீண்டும் உங்களால் புத்துயிர் பெற காத்துக்கிடக்கின்றன . பல ஆண்டுகளாய் சிதறிய லிங்கங்களை எல்லாம் எம் ஆதி குரு அகத்தியரின் அருளோடு புனரமைத்து வருகிறேன் .
அகத்திய கிருபா என் அமைப்பாகும்
நாளை மறுதினம் பஞ்ச பாண்டவர்களில் நகுநாளால் பூஜிக்க பட்ட லிங்கம் புனரமைக்க பட இருக்கிறது . வாருங்கள் . தமிழகத்தில் சிதிலம் கொண்ட கோவில்களே இல்லை என்னும் நிலையை கொண்டு வருவோம் . இந்த தேசத்து மக்கள் எல்லாம் நலமடைய நம் கோவில்களை சிதைவில் இருந்து மீட்போம் .நம் சந்ததிகள்வாழ ஆலயங்களை காப்போம் .இறைவா இந்த தேசம் விழிப்படையட்டும் . எம் மக்கள் இறை உணரட்டும். சிதிலமான ஆலயங்கள் எல்லாம் உன் அளவற்ற கருணையினால் புனரமைக்க படட்டும் . உலகம் அமைதி பெறட்டும் .மகா குரு அகத்தியரே உன் வரவு மீண்டும் நிகழட்டும் . வாருங்கள் இறை கொண்ட ஆலயம் காப்போம் .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக