அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சிமா நகரத்தை ஒட்டி இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள், வாக்கு வராத குழந்தைகள் இந்த ஆலயத்திற்கு சென்று முடிந்தபொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக, அமைதியாக பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளைக் கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு.
கோவில் முகவரிகள்:
பேசும் பெருமாள்:
அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்
கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256
திருச்செந்தூர் :
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் - 628 205,தூத்துக்குடி மாவட்டம். போன்: +91-4639 - 242 221


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக