வியாழன், 24 ஆகஸ்ட், 2017

வாய் சரியாக, சரளமாக பேச முடியாமல் இருப்பவர்கள் பிரச்னை தீர ஜீவ நாடியில் அகத்திய பெருமான் கூறிய வழி


அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சிமா நகரத்தை ஒட்டி இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள், வாக்கு வராத குழந்தைகள் இந்த ஆலயத்திற்கு சென்று முடிந்தபொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக, அமைதியாக பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளைக் கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு.


இந்தக் குற்றம், குறை எதனால் வருகிறது ? என்றெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு மனிதன் ஒரு பிறவியிலே எந்த துன்பத்தைத் தீர்க்க முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறானோ அந்தத் துன்பத்தை அவன் பிறருக்கு செய்திருக்கிறான் என்பது பொருள். எனவே இந்த ஜென்மத்தில் கூடுமானவரை அது போன்ற பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவுகளை செய்துகொண்டு மனதை தளரவிடாமல் இறை பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் கட்டாயம் இறைவனருளால் நன்மைகள் நடக்கும். ‘ இறைவனை வேண்டி எமக்கு இதுவரை எந்தப்பலனும் இல்லை ‘ என்று எண்ணக்கூடியவர்கள் இரண்டு முடிவுகள் எடுக்கலாம். ஒன்று இறை மறுப்பு நிலைக்கு சென்றுவிடலாம் அல்லது மீண்டும் மனம் தளராமல் இறை வழியில் செல்லலாம். மனம் தளராமல் பிரார்த்தனை செய்தால் நன்மை உண்டு, நன்மை உண்டு, நன்மை உண்டு.

கோவில் முகவரிகள்:

பேசும் பெருமாள்:

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்
கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256

திருச்செந்தூர் :

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் - 628 205,தூத்துக்குடி மாவட்டம். போன்: +91-4639 - 242 221

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக