திங்கள், 31 ஜூலை, 2017

அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - இராஜராஜசோழன் கருவூராரின் நேரடி பார்வையிலே இருந்தார். அப்படியென்றால் அவர் புரிந்த போர்களை நீங்கள் சொன்ன அடிப்படையில் எப்படி புரிந்துகொள்வது ?



அப்படியென்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ, நாங்களே ஆலோசனைகள் கூறுவதால், இங்கு வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன ? அல்லது அதுவரை செய்த பாவத்தையெல்லாம் நிறுத்திவிட்டு “ மகாமுனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில்தான் செல்லவேண்டும் “ என்று தீர்மானிக்கிறானா ? இந்த இடத்தில் கேட்கும்பொழுது பவ்யமாக கேட்டுவிட்டு பிறகு “ இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைதான் பின்பற்றவேண்டும் “ என்றுதானே இங்கு வருகின்ற, இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படிதானே வாழ்கிறார்கள். அப்படித்தான், கருவூரார் எதைக் கூறினாலும், எது, தனக்கு சாதகமோ, தன்னால் இயலுமோ அதை ஏற்றுக்கொள்வதும், எது, மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ, அதை பின்பற்றிதான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன ? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்யமாக கேட்டுவிட்டு, சிவபெருமான் அந்த இடத்தைவிட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல்தான் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி, அவன் மதியிடம் அடங்கியிருக்கிறதோ, அவன்தான் எமது சொல்லை ஏற்பான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக