ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
அன்பர்களுக்கு வணக்கம். நகரேழு காஞ்சியில் பாலாற்றங்கரைக்கு தென்பால் தூசி கிராமத்தில் வீற்றிருக்கும்
எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இவ்வுலகம் உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து
வீடுபேறும் அளித்திட பல ஊர்களி்ல் கோயில் கொண்டுள்ளார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து அருள்கிறார்.
நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று "அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம்".
சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தர் மகான் ஸ்ரீஅகத்தியப்பெருமான் லோபமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவத்தை காண கண் கோடி வேண்டும்.
சிவபெருமான், முருகப்பெருமான், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் அனைவரும் பார்த்திருப்போம். ஐயன் அகத்தியப் பெருமான் திருக்கல்யாணம் ஐயன் வீற்றிருக்கும் தலங்களில் ஒரு சில தலங்களில் மட்டுமே வெகு விமரிசையாக நடைபெறும்.
இத்திருக்கல்யாண நான்காம் ஆண்டு வைபவம் வரும் 18.08.2017 ஆவணி மாதம் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை தூசி கிராமத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் வந்து திருக்கல்யாணம் கண்டுகளித்து எல்லா வளமும் தடையில்லாமல் கிடைத்திட வாழ்வில் நீங்கா புகழ்பெற ஐயனின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இத்திருக்கல்யாண வைபவத்தில் தங்கள் மனமுவந்து இயன்ற பொருள் உதவி அளிக்க முடிந்தவர்கள் உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். உதவி செய்ய முடியாதவர்கள் வருந்த வேண்டாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி அகத்தியர் குழுமம், 9894211430. 9715902042.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக