வியாழன், 5 பிப்ரவரி, 2026

ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிச் செய்த கன்ம காண்டம் -கண் நோய் வரலாறு

கண் நோய் வரலாறு 

கருதியதோர் கண்ணில் வந்த வியாதி கேளு
காரணந்தான் சொல்லுகிறேன் கட்டாய் கேளு
வெருதியென்ற மாதர்களையுற்றுப் பார்த்து
வுடனேங்கி மோகமுற்று வுடற்பா வந்தான்
சதிருடனே கருக்கண்டு வழித்த தாலுஞ்   
சக்தித்தோ டத்தாலுந் தெய்வத்தாலும்
விருதுடனே பலவுயிரைக் கண்டு
விலக்காதே பார்த்திருந்த வீரினாலே

வீறான பலபாவஞ் செய்கை யாலு
மெய்யதனைப் பொய்யென்ற வம்பினாலும்
வேறாக பிறக்கிடுகண் செய்த தாலும்
மிக்க சிவாலயங்கள் விருமபாததாலும்           
கூரான தெய்வத்தை யிகழ்ந்த தாலுங்
கூர்விழியில் நேர்விளங்குஞ் சலந்தானப்பா
வாறாக தொண்ணுற்றாறு வியாதி வரலாறு
மதிகமாங் கன்மமென வரிந்து சொல்லே 


கன்ம நிவர்த்தி

சொல்வதென்ன கன்மம்வந்து தொடர்ந்து தானாற்
சூத்திரமாந் தான தர்மஞ் செய்ய வேணுஞ்
சொல்வதென்ன கோவில்குளந் தீர்த்த வாசஞ்
சிவனோடு பஞ்சகர்த்தாள் தெரிசனமாம் பூசை
வெல்வதென்ன கோயில்குளங் கட்டவேணும்
வேதியர்க்குத் தான தர்ம மிகவுஞ் செய்தல்
கொல்வதொன்றுஞ் செய்யாதே யிரப்போர்க் கீதல்
குருபாதந் தனைப்பணிதல் கொள்கை யாமே

ஆமிந்த வுலகத்தில் லிருக்கும் போதி
லளவற்ற கன்மமடா ஆர்தான் வெல்வார்
தாமிந்த கன்மமொன்று மணுகா தப்பா
சார்வான சிவயோகி தவத்தி னாலே
வாமிந்த தேவிசிவ பூசையாலே
மகத்தான தருமமென்ற குளிகையாலே
யோமிந்தப் பெரியோர்க ளானவாறு
முலகத்துள் ளோர்க்குற்ற தர்மந் தானே

தர்மமது செய்வதற்கு கசந்தா யானால்
சண்டாள பாவம்வந்து சபிக்கும் பாரு
வர்மமென்ற காசமது கண்ணில் வந்து
மருளாக விறுவிழியை மறைத்துக் கொள்ளுங்
கன்மமென்ற காசமது கண்ணில் வந்து
மருளாக விறுவிழியை மறைத்துக் கொள்ளுங்
கன்மமென்ற காசநீர் முதலா யுள்ள
கண்மாந்தர நோய்கவிழ்தங்  கருதிக் கேளு
நிர்மலமா மிரும்பீயங் காந்த மீய
மிரண்டுடனே கெந்தியரி தாரம் வீசுமே    

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -4